சிம்பு, நயன்தாரா மீண்டும் காதலா

சிம்பு, நயன்தாரா இடையே மீண்டும் காதல் மலர்ந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.


சமீபத்தில் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் இருவரும் கட்டிப்பிடித்து ‘போஸ்’ கொடுத்தனர். இது அவர்கள் தங்கள் பழைய காதலை புதுப்பித்து கொண்டதை பறைசாற்றுவது போல் இருந்தது என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
சென்னையில் சமீபத்தில் நடந்த நடிகை திரிஷாவின் பிறந்தநாள் விருந்து நிழ்ச்சியில்தான் இது நடந்தது. நயன்தாரா, அமலாபால் உள்ளிட்ட நடிகைகள் விருந்துக்கு வந்து இருந்தனர். திடீரென சிம்புவும் வந்தார்.

நயன்தாராவும், சிம்புவும் அருகருகே உட்கார்ந்து நீண்ட நேரம் சிரித்து பேசிக்கொண்டு இருந்தனர். விருந்தும் சாப்பிட்டார்கள்.

2006–ல் வல்லவன் படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தனர். அப்போது காதல் வயப்பட்டார்கள். ஆனால் சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காதலை முறித்து விட்டதாக பகிரங்கமாக அறிவித்தனர்.

அதன்பிறகு டைரக்டர் பிரபுதேவாவுடன் நயன்தாரா நெருக்கமானார். இவருவரும் திருமணம் வரை வந்தனர்.

நயன்தாரா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். பிரபுதேவாவை மணப்பதற்காகவே இந்து மதத்துக்கு மாறினார். ஆனால் இதுவும் கடைசி நேரத்தில் முறிந்தது. தற்போது நயன்தாரா தனியாகவே இருக்கிறார். பிரபுவேதவா இந்திப் படங்கள் இயக்க போய்விட்டார்.

இதற்கிடையில் சிம்புவுக்கும், ஹன்சிகாவுக்கும் காதல் மலர்ந்தது. அதுவும் முறிந்து போனது. சிம்புவும் தனியாக இருக்கிறார்.

டைரக்டர் பாண்டிராஜ் தனது ‘இது நம்மஆளு’ படத்தில் இருவரையும் மீண்டும் ஜோடியாக்கினார். அப்போதுதான் இருவருக்கும் பழைய நட்பு துளிர்ந்தது.

படப்பிடிப்பில் நெருக்கமாக சிரித்து பேசிக்கொண்டு இருந்தனர். இப்போது விருந்துகளிலும் ஜோடியாக பங்கேற்க துவங்கியுள்ளனர். இது திருமணம் வரை போகலாம் என படஉலகினர் கிசுகிசுக்கின்றனர்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget