கடலைப்பருப்பு சட்னி செய்வது எப்படி

கடலைப்பருப்பு சட்னி வித்தியாசமான சுவையுடன் சூப்பராக இருக்கும். இந்த சட்னியை எப்படி செய்வது என்று இப்போது கீழே விரிவாக பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் :

கடலைப்பருப்பு – 1/2 கப்
தேங்காய் துண்டுகள் – 1 கையளவு
வர மிளகாய் – 5
தக்காளி – 1
கறிவேப்பிலை – சிறிது
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

தாளிக்க :

கடுகு
கறிவேப்பிலை
உளுந்தம் பருப்பு
பெருங்காயத்தூள்
எண்ணெய் – 1 ஸ்பூன்


செய்முறை :

* வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப்பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

* அடுத்து தேங்காய், வரமிளகாய், தக்காளி, கறிவேப்பிலையை தனித்தனியாக போட்டு நன்றாக வறுத்து குளிர வைக்கவும்.

* அனைத்தும் நன்றாக ஆறியதும் அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு போட்டு நன்கு மென்மையாக அரைத்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து அரைத்த சட்னியில் ஊற்றி கிளறவும்.

* சுவையான கடலைப்பருப்பு சட்னி ரெடி!!!

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget