மாப்பிள்ளை அழைப்பிற்கான நேரம்,
பெண் அழைப்பிற்கான நேரம்,
திருப்பூட்டுதல் என்னும் மங்கல நாண் சூடும் நேரம்,
சாந்தி முகூர்த்தத்திற்கான நேரம்.
இதில் இரண்டாவதாக வரும் பெண் அழைப்பிற்கான நேரம் குறிக்கும் பொழுது வெள்ளிக்கிழமை அன்று திருமணம் நடைபெற்றால், அன்றைய தினம் பிறந்த வீட்டிலிருந்து பெண்ணை அனுப்ப யோசிப்பார்கள். லட்சுமி கடாட்சம் தம் வீட்டிலேயே தங்க வேண்டும் என்று விரும்புவர்.
அதேசமயம் மண்டபத்திலிருந்து மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம். குறிப்பாக லட்சுமி என்ற அடிப்படையில் பெயர் அமைந்த பெண்களுக்கு வெள்ளிக்கிழமை பகல் நேரத்தில் பெண் அழைப்பு நடத்தலாம். பெண் அழைப்பு தான் புகுந்த வீட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைகிறது.
நல்ல சுப ஓரை பார்த்து சாந்தி முகூர்த்தம் நடத்தினால் ஆண் வாரிசுகள் பிறக்கும். அதே நேரத்தில் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வங்களின் வழிபாடு முடித்து அதன் பின்னர் சாந்தி முகூர்த்தம் செய்தால், பிறக்கும் குழந்தைக்கு பிறர் போற்றும் அளவு வாழ்க்கை அமையும்.
கருத்துரையிடுக
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.