தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் அனைவரும் விரும்பும் ஒரு நாயகி என்றால் அது நயன்தாரா மட்டுமே. நாம் சொல்வது ரசிகர்களை மட்டுமல்ல, சில தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், ஹீரோக்கள் ஆகியோர் தங்களது படங்களில்
நயன்தாரா இருந்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், தெலுங்குத் திரையுலகத்தின் மீது ஒரு வெறுப்பில் இருக்கிறார் நயன்தாரா என்கிறார்கள்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு 'அனாமிகா' தெலுங்குப் படத்தின் பிரமோஷன்களுக்கு வரவில்லை என்ற காரணத்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிலர் குரல் எழுப்பினார்கள். அவரை தெலுங்குப் படங்களில் ஒப்பந்தம் செய்யக் கூடாது என்று மறைமுகமாக தடையையும் விதித்தார்கள். சுமார் 2 வருடங்களுக்குப் பிறகுதான் 'பாபு பங்காரம்' படத்தில் நடிக்க சம்மதித்தார். ஆனால், அந்தப் படத்தின் இறுதிக் கட்டத்திலும் நயன்தாராவிற்கும் படக்குழுவினருக்கும் சண்டை வந்துவிட்டது. இதனால்தான் நயன்தாரா தெலுங்குப் படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வருகிறார் என்கிறார்கள்.
இதற்கு முன் சிரஞ்சீவி நடித்து வரும் 'கைதி எண் 150' படத்திற்கும், பாலகிருஷ்ணா நடித்து வரும் 'கௌதமிபுத்ர சட்டகர்னி' படத்திற்கும் அவரை நாயகியாக நடிக்கக் கேட்டார்கள். ஆனால், நயன்தாரா அதற்கு சம்மதிக்கவில்லை. 3 கோடி ரூபாய்க்கு மேலும் சம்பளம் தருவதாகக் கூறியும் அவ்வளவு தொகையைக் கூட நயன்தாரா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஒரு பக்கம் தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க சம்மதிக்க மறுக்கும் நயன்தாரா தமிழில் மட்டும் சிவகார்த்திகேயன், அதர்வா ஆகியோரது படங்களில் நடிக்கிறாரே என தெலுங்குத் திரையுலகினர் ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள். தமிழில் தனக்கு நல்ல மரியாதை இருக்கிறது. அதுவே போதும் என்று நயன்தாரா நினைக்கிறார் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
நயன்தாரா இருந்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், தெலுங்குத் திரையுலகத்தின் மீது ஒரு வெறுப்பில் இருக்கிறார் நயன்தாரா என்கிறார்கள்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு 'அனாமிகா' தெலுங்குப் படத்தின் பிரமோஷன்களுக்கு வரவில்லை என்ற காரணத்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிலர் குரல் எழுப்பினார்கள். அவரை தெலுங்குப் படங்களில் ஒப்பந்தம் செய்யக் கூடாது என்று மறைமுகமாக தடையையும் விதித்தார்கள். சுமார் 2 வருடங்களுக்குப் பிறகுதான் 'பாபு பங்காரம்' படத்தில் நடிக்க சம்மதித்தார். ஆனால், அந்தப் படத்தின் இறுதிக் கட்டத்திலும் நயன்தாராவிற்கும் படக்குழுவினருக்கும் சண்டை வந்துவிட்டது. இதனால்தான் நயன்தாரா தெலுங்குப் படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வருகிறார் என்கிறார்கள்.
இதற்கு முன் சிரஞ்சீவி நடித்து வரும் 'கைதி எண் 150' படத்திற்கும், பாலகிருஷ்ணா நடித்து வரும் 'கௌதமிபுத்ர சட்டகர்னி' படத்திற்கும் அவரை நாயகியாக நடிக்கக் கேட்டார்கள். ஆனால், நயன்தாரா அதற்கு சம்மதிக்கவில்லை. 3 கோடி ரூபாய்க்கு மேலும் சம்பளம் தருவதாகக் கூறியும் அவ்வளவு தொகையைக் கூட நயன்தாரா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஒரு பக்கம் தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க சம்மதிக்க மறுக்கும் நயன்தாரா தமிழில் மட்டும் சிவகார்த்திகேயன், அதர்வா ஆகியோரது படங்களில் நடிக்கிறாரே என தெலுங்குத் திரையுலகினர் ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள். தமிழில் தனக்கு நல்ல மரியாதை இருக்கிறது. அதுவே போதும் என்று நயன்தாரா நினைக்கிறார் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
கருத்துரையிடுக
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.