இன்று சர்வதேச நுகர்வோர் உரிமை தினம். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விஷயம் இருக்கலாம், இல்லாமல் போகலாம். ஒருவர் சமூக பொருளாதார
நிலையில் உயர்ந்திருக்கலாம், தாழ்ந்திருக்கலாம். மெத்தப் படித்தவராக அல்லது படிக்காத பாமரராக இருக்கலாம். ஆனால் உலகில் எல்லோரும் நுகர்வோர்தான் (consumer).
பிறந்த குழந்தை முதல், குடுகுடு முதியவர் வரை நுகர்வோர் என்ற தகுதி பெறாதவர் எவரும் இல்லை. எனவே, நுகர்வோரான நாம் நமது உரிமைகளை அறிந்திருப்பது, அந்த உரிமைகள் மீறப்படும்போது என்ன செய்வது என்ற தெளிவைப் பெற்றிருப்பது அவசியம்.
அந்த அவசியத் தகவல்களை வழங்குகிறார், வழக்கறிஞர் ஆ. முனிராஜா... இன்று மனித உரிமை கருத்து எவ்வாறு உச்சத்தில் இருக்கிறதோ, அதைப் போல நுகர்வோர் உரிமை கருத்தும், உணர்வும் வளர்ந்திருக்கின்றன. 1962-ம் ஆண்டு மார்ச் 15 அன்று அமெரிக்க காங்கிரசில் உரையாற்றிய அன்றைய ஜனாதிபதி ஜான் எப் கென்னடி, முதல்முறையாக நுகர்வோர் உரிமை குறித்துப் பேசினார்.
கருத்துரையிடுக