கர்ப்பமாக இருக்கும்போது வயிறு விரிவடைய தொடங்கும். நார்மல் மற்றும் சிசேரியன் முறை எதுவாக இருந்தாலும் தழும்புகள் ஏற்படும். இதைத் தடுக்க
முடியாது. நாலாவது மாதத்தில் இருந்து வயிறு விரிவடையத் தொடங்கும்போதே இதில் கவனமாக இருக்க வேண்டும். இதற்கென மருந்துகள் கிடைக்கின்றன.
இதை குழந்தைப்பிறப்புக்கு முன்பும் பின்னரும் தொடர்ந்து தடவி வந்தால் தழும்புகளைக் குறைக்கலாம். வயிறு சுருங்கும்போதுதான் தழும்புகள் வெளியே தெரிய ஆரம்பிக்கும். அப்போது மருந்துகளைப் பயன்படுத்துவது பாதி பலன்தான் கொடுக்கும். தரமான மாய்ஸ்சரைசர் க்ரீம்களை தடவுவதும் நல்ல தீர்வே!
கருத்துரையிடுக