ரித்திஸ் ஹரிஸ் மூவீஸ் தயாரிப்பில் ”மணம் கொண்ட காதல்”

ரித்திஸ் ஹரிஸ் மூவீஸ் தயாரிப்பில் ”மணம் கொண்ட காதல்”

ரித்திஸ் ஹரிஸ் மூவீஸ் எனும் புதிய நிறுவனம் தயாரிக்கும் “மணம் கொண்ட காதல்” என்கிற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது . இப்படத்தை P.முத்துராமலிங்கம் தயாரிக்கிறார்.
கதை : கல்யாணத்திற்கு முன்னால் காதலிப்பது மட்டும் காதல் அல்ல. கல்யாணத்திற்குப் பின் காதலிப்பது தான் உண்மையான காதல் என்பதை உணர்த்துவது தான் “மணம் கொண்ட காதல்” படத்தின் கதை.
நடிகர்கள் : இப்படத்தில் முத்துராம் கதாநாயகனாக அறிமுகமாகிறார் .கதாநாயகியாக நோபியா மற்றும் ஸ்ரியா என்பவரும் அறிமுகமாகிறார்கள்.இவர்களுடன், நிழல்கள் ரவி, பாண்டு, மீராகிருஷ்ணன், பெஞ்சமின், மாஸ்டர் கணேஷ், நமோ நாராயணன், காதல் அருண் ,கம்பம் மீனா, பசங்க செந்தி ,முனிராஜ், செல்வம், பானுஷா , தங்கவேல் மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்படத்தினை எழுதி இயக்குகிறார்இயக்குனர் புகழேந்திராஜ்.
படப்பிடிப்பு நடைபெறும் இடங்கள் : மணம் கொண்ட காதல் படத்தின் படப்பிடிப்புகள் மதுரை, ஆலப்புழா, கொடைக்கானல், தேனி, கம்பம், சென்னை மற்றும் அதன் சுற்றபுறங்களில் நடைபெற்று வருகிறது.
இசையமைப்பாளர் விக்ரம் வர்மன் இசையில் 4 பாடல்கள் இடம்பெறுகின்றன. பாடல்களைப் வைர பாரதி, கலைக்குமார், கோவைதனபால், ஆகியோர் எழுதியுள்ளனர்.
இதில் ஒரு பாடலை இயக்குனர் புகழேந்திராஜ் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடலாசிரியர் கலைக்குமார் எழுதிய குலதெய்வ கோயில் பாடல்.....
பாட்டு பாட்டு பட்டசுடா ,போட்டி போட்டு பாடுங்கடா :
கூட்டு கூட்டு கூட்டாளிடா கூடி அணைச்சி கூத்தாடுடா :
என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கும் என்கிறார் இசையமைப்பாளர் விக்ரம் வர்மன்.
தொழில்நுட்பக்கலைஞர்கள்
எழுத்து- இயக்கம் : புகழேந்திராஜ்
ஒளிப்பதிவு: M.S.அண்ணாதுரை
இசை: விக்ரம் வர்மன்
பாடல்கள்: வைர பாரதி, கலைக்குமார், கோவைதனபால்,
எடிட்டிங்: K.தணிகாசலம்
நடனம்: அஜய்
கலை : சாய் குமார்
புகைப்படம் : பாவை வின்சென்ட்
தயாரிப்பு மேற்பார்வை: D.ஸ்ரீதரன்
மக்கள் தொடர்பு: S.செல்வரகு
தயாரிப்பு: P.முத்துராமலிங்கம்
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget