(ஜெய்ருத்ரா) கதிர் - வம்சி கிருஷ்ணா நடிக்கும் “களவு தொழிற்சாலை” T.கிருஷ்ணசாமி இயக்குகிறார்
எம்.ஜி.கே மூவி மேக்கர்ஸ் சார்பில் எஸ்.ரவிசங்கர் தயாரிக்கும் படம் “களவு தொழிற்சாலை”
இந்த படத்தில் ஜெய்ருத்ரா (கதிர்) – வம்சி கிருஷ்ணா இருவரும் இணைந்து நடிக்கிறார்கள்.
கதாநாயகியாக மும்பையை சேர்ந்த குஷி அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் மூ.களஞ்சியம் நடிக்கிறார். மற்றும் நட்ராஜ்பாண்டியன், செந்தில்,ரேணுகா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - வி.தியாகராஜன் (இவர் ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் உதவியாளர்)
இசை - ஷியாம் பெஞ்சமின் (இவர் ஹரீஷ் ஜெயராஜிடம் பணியாற்றியவர்)
பாடல்கள் - அண்ணாமலை,நந்தலாலா
படத்தொகுப்பு - யோகாபாஸ்கர்
நடனம் - சங்கர் , சண்டை பயிற்சி - எம்.கே.லீன்
கலை - முரளிராம் , நிர்வாக தயாரிப்பு - எஸ்.என்.அஸ்ரப்
இனைதயாரிப்பு - பிரியதர்ஷினி ரவிசங்கர்
தயாரிப்பு - ரவிசங்கர்
கதை, திரைக்கதை,வசனம், இயக்கம் - டி.கிருஷ்ணசாமி
படம் பற்றி இயக்குனர்....
இதுவரை வெளிவராத கடத்தலின் இன்னொரு நிழல் உலகத்தையும் அதன் சர்வதேச தொடர்புகளையும் திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது.காதல்,சஸ்பென்ஸ்,திரில்லர் என்று மூன்று திரைக்கதையும் மாறி மாறி பயணிக்கிறது. கதிர் கும்பகோணத்தில் வாழும் ஒரு அப்பாவி இளைஞனாகவும் சந்தர்ப்ப சூழ்நிலையில் சட்டத்தின் பிடியில் குற்றவாளியாக சிக்கி கொள்ளும் இளைஞனாகவும் வாழ்ந்திருக்கிறார்.
திரைக்கதையின் முக்கிய பகுதியில் வரும் கதிர் – குஷி காதல் ஒரு நிறைவான காதலை நிச்சயம் நினைவு படுத்தும். கதையின் முக்கிய திருப்பமாக இயக்குனர் மூ.களஞ்சியம் சி.பி.சிஐடி அதிகாரியாக நடித்திருக்கிறார்.
இந்த படத்திற்காக கும்பகோணம் அருகில் உள்ள ஒரு கோவிலில் கிட்டதட்ட இருநூறு அடி நீளத்திற்கு பழமை வாய்ந்த ஒரு செயற்கையாக சுரங்கம் அமைக்கப்பட்டு படமாக்கப் பட்டது.
கதையின் முக்கிய பகுதி இந்த சுரங்கத்தின் உள்ளே நடைபெறுகிறது.
ஜூன் வெளியீடாக வர தயாராகிக் கொண்டிருக்கிறது “களவு தொழிற்சாலை”
கருத்துரையிடுக