ஆந்திராவை மிரட்டும் கேனிஷா

எவ்வளவு பெரிய ஹீரோயினாக இருந்தாலும் ஆந்திராவை பொறுத்தவரை ஒரு பெரிய ஹிட் கொடுத்த பிறகே கவனிக்கப்படுவார். ஆனால் ஒரு
முதல் படம் ரிலீசுக்கு முன்பே பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறார் கேனிஷா. விமான பணிப்பெண்ணாக இருந்த கேனிஷா மாடல் உலகிலும் கலக்க... ஒரு செல்போன் விளம்பரத்தில் நடித்தார். அதன் மூலம் கணபதி பாபா மோரியா என்ற தெலுங்கு படத்தில் வாய்ப்பு வந்தது. படம் இன்னும் சில வாரங்களில் ரிலீசாக இருக்கிறது. அதற்குள் ரசிகர் மன்றம் வைக்காத குறையாக ரசிகர்களும், போட்டிபோட்டு படங்களை வெளியிட்டு மீடியாக்களும் கேனிஷாவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத கேனிஷா "நடிப்பு எனக்கு சும்மா டைம் பாஸ்தான். ஐ.ஏ.எஸ் ஆகணுங்றதுதான் கனவு. எப்போ ஐ.ஏ.எஸ் பாஸ் பண்ணுவேனோ அப்பவே நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு போய்விடுவேன்" என்ற அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்புதான் அவருக்கு இன்னும் டிமாண்டை ஏற்படுத்தியிருக்கிறது. இப்போதே 5 படங்கள் காத்திருக்கிறது. எதற்கும் ஓகே சொல்லவில்லை. கணபதி வரட்டும் பார்க்கலாம் என்று கூறியிருக்கிறாராம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget