நெருக்கமாக நடிக்க கூடாதா சுர்வின் சாவ்லா

வசந்த் இயக்கிய, மூன்று பேர் மூன்று காதல் படத்தில் அறிமுகமானர் சுர்வின் சாவ்லா. இவர்தான் அடுத்த ஜோதிகா என்ற வசந்த்
பெருமையோடு அறிமுகப்படுத்தினார். ஆனால் சுர்வின் இந்தியில் சன்னி லியோனுக்கு சவால் விடும் வகையில் படு கவர்ச்சியாக நடித்து வருகிறார்.

இவர் நடித்து சமீபத்தில் வெளியான ஹேட் ஸ்டோரி 2வில் இந்தியாவில் தணிக்கை செய்யப்படாத ஆங்கில படங்களை மிஞ்சும் முத்தக் காட்சிகளையும், படுக்கையறை காட்சிகளையும் கொண்டதாக இருக்கிறது.

இதுகுறித்து சுர்வின் கூறியிருப்பதாவது: ஹிம்மத்வாலாவில் சிறிய கேரக்டரில் நடித்தேன். அது சரியாக அமையவில்லை. இப்போது ஹேட் ஸ்டோரி 2 சரியான படமாக அமைந்திருக்கிறது. ஆனால் அதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் என்னை விமர்சிக்கிறார்கள். படத்தில் நிறைய நெருக்கமான சீன்கள் இருக்கிறது உண்மைதான். கதைக்கு அது தேவையாக இருக்கும் போது என்ன செய்ய முடியும். படத்தின் ஹீரோ ஜெய் எனது நண்பர். அதனால் தைரியமாக நடித்தேன் அது தப்பா?. படத்தின் கதையும், கேரக்டரையும் பாருங்கள் அதை தாண்டி மற்றதை ஏன் கவனிக்கிறார்கள் என்று தெரியவில்லை. என்கிறார் சுர்வின்.

அர்ஜுன் மூன்று மொழிகளில் இயக்கி வரும் ஜெய்ஹிந்த்&2வில் சுர்வின்தான் ஹீரோயின். அதில் தேசப் பற்று மிக்க பெண்ணாக நடித்து வருகிறார். ஹேட் ஸ்டோரி 2க்கு பிறகு இந்தி வாய்ப்புகள் சுர்வின் வீட்டு கதவை தட்ட ஆரம்பித்திருக்கிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget