மழையில் கிளாமர் ஆட்டம் மோனிகா

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் மோனிகா. இந்திரா படத்தில் இடம் பெற்ற, 'நிலா காய்கிறது நிதம் தேய்கிறது...'
என்ற பாடலில் நடித்தவர், அதன்பிறகு 'அழகி' படத்தில் குமரியாக நடித்திருந்தார். பின்னர் சில படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் படங்கள் வெற்றி பெறவில்லை. அதனால் தனது குடும்ப இமேஜை உடைத்துவிட்டு 'சிலந்தி' என்ற படத்தில் கவர்ச்சி பிரளயமாய் வெடித்து சிதறினார் மோனிகா.

அந்த படம் ஓரளவு ஓடினபோதும், மீண்டும் மோனிகாவுக்கு சினிமாவில் பெரிய தேக்கநிலை. அதனால் சிறிய வேடங்களிலும் நடித்து வந்த அவர், சமீபத்தில் முஸ்லீம் மதத்துக்கு மாறினார். அதோடு, மதம் மாறி விட்டதால்தான் சினிமாவில் நான் நடிக்கவில்லை என்றும் செய்தி வெளியிட்டார் மோனிகா. இந்த நிலையில, அவர் கடைசியாக நத்த நதிகள் நனைவதில்லை என்ற படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்த படத்தில் புதுமுக நடிகர் ப்ரணவ் என்பவருககு ஜோடியாக நடித்துள்ளார் மோனிகா.

இந்த படத்தில் அவர் ஹோம்லியான கெட்டப்பில் நடித்திருந்தபோதும், ஒரு பாடல் காட்சியில் மழையில் நனைந்தபடி கிளாமர் ஆட்டம் போட்டுள்ளார் மோனிகா. தொப்பலாக நனைந்து கொண்டு அவர் ஆடியிருக்கிறார். ஆக, போகிற போக்கிலும் தன்னை ரசிகர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்களை நனைத்து விட்டு செல்கிறாராம் மோனிகா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget