கோலிவுட் புது வரவு ஆனந்தி

மலையாளத்தில் நடித்துக்கொண்டிருந்த லட்சுமிமேனனை தனது கும்கி படத்தில் அறிமுகம் செய்தவர் பிரபுசாலமன். அப்போது 9 ஆம் வகுப்பே
படித்துக்கொண்டிருந்த பதினான்கு வயது பெண்ணான லட்சுமிமேனன், ஒவ்வொரு டேக்கை உடனுக்குடன் ஓ.கே செய்ததைப்பார்த்து ஆச்சரியப்பட்டு போயிருந்தார் பிரபுசாலமன்.

அநத நேரத்தில் தனது சுந்தரபாண்டியன் படத்துக்கு கதாநாயகி தேடிக்கொண்டிருந்த சசிகுமாரிடம், ஒவ்வொரு நிமிசத்துக்கும் ஒரு எக்ஸ்பிரசன் கொடுக்கிறாள். ரொம்ப பெரிய நடிகையாக வருவாள் என்று லட்சுமிமேனனுக்கு நற்சான்றிதழ் கொடுத்து அவரிடம் ஒப்படைத்தார் பிரபுசாலமன். அப்படித்தான் தமிழில் சினிமாவில் நல்ல நடிகை என்ற பெருமையோடு தற்போது வளர்ந்து நிற்கிறார் லட்சுமிமேனன்.

அவரைத் தொடர்ந்து இப்போது இன்னொரு நடிகையான ஆனந்திக்கும் நற்சான்றிதழ் வாசித்துள்ளார் பிரபுசாலமன். எனது கயல் படத்தில் ஆனந்தியின் நடிப்பைப்பார்த்து அசந்து போகாதவர்களே இல்லை. அப்படியொரு டேக் ஆர்ட்டிஸ்ட் என்று இப்போது பாலா தயாரிப்பில் களவாணி சற்குணம் இயக்கும் படத்திற்காக ஆனந்தி புராணம் வாசித்திருக்கிறார் பிரபுசாலமன்.

ஏற்கனவே தான் இயக்கிய களவாணியில் ஓவியா, வாகை சூடவாவில் இனியா, நய்யாண்டியில் நஸ்ரியா என்று மலையாள பெண்குட்டிகளாக நடிக்க வைத்த சற்குணம், இப்போது அதர்வாவை வைத்து தான் இயக்கும் புதிய படத்திற்கு நான்காவதாக ஆந்திர பெண்குட்டியான இந்த ஆனந்தியை நடிக்க வைக்கிறார். ஆக, மலையாள செண்டிமென்ட் எப்பவுமே நமக்கு செட்டாகும் என்று ஆனந்தி கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறார் சற்குணம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget