சீரியஸ் நாயகியாகும் ராய் லட்சுமி

காஞ்சனா படத்தில் நடித்த ராய் லட்சுமி, அந்த படம் ஹிட்டடித்ததால் அடுத்து தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் தனக்கு சிங்கிள் ஹீரோயினி
வேடங்களாகத்தான் கிடைக்கும் என்றுதான் எதிர்பார்த்தார். ஆனால், அதன்பிறகு ஒன்பதுலகுரு என்ற படத்தில் அவருக்கு ஹீரோயின் வேடம் கிடைத்தது. ஆனால் படம் ப்ளாப் ஆகி விட்டதால் அதையடுத்து அவரை கண்டுகொள்வாரே இல்லை. 

அதனால்தான் லட்சுமிராய் என்ற பெயரை ராய் லட்சுமியாக மாற்றிக்கொண்டு களமிறங்கினார். அப்படி வந்தபோதும் இரும்புக்குதிரை, அரண்மனை போன்ற படங்களில் சிறிய வேடங்களே கிடைத்தது. இருப்பினும் தற்போது லாரன்ஸ் இயக்கும் ஒரு டிக்கெட்டுல ரெண்டு சினிமா படத்தில் இரண்டு கதைகளில் ஒரு கதையின் நாயகியாக நடிக்க வைத்திருக்கிறார்.

அதுவும் ராய்லட்சுமியே நினைத்துப்பார்க்காத வகையில், அவருக்கு ஒரு சீரியசான வேடம் கிடைத்துள்ளதாம். இதற்கு முன்பு லாரன்சுடன் நடித்த காஞ்சனாவில்கூட கவர்ச்சி பொம்மையாகவே நடித்த ராய்லட்சுமிக்கு, இந்த படத்தில் பர்பாமென்ஸ் வேடமாம். இதை முன்கூட்டியே அவரிடம் சொன்ன லாரன்ஸ், இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொண்டால் சினிமாவில் பெரிய பியூச்சர் இருக்கும் என்று ராய் லட்சுமியை உசுப்பேத்தி விட்டுள்ளாராம்.

அதனால், வழக்கமாக தான் நடிக்கும் படங்களில் நடிக்க மும்பையில் இருந்து படப்பிடிப்பு நடைபெறும் அன்றைக்குத்தான் வந்திறங்குவார் ராய்லட்சுமி. ஆனால் இந்த படத்துக்கு மட்டும் தனக்கான காட்சிகளை படமாக்குவதற்கு சில தினங்களுக்கு முன்பே வந்திருந்து சீரியசாக ரிகர்சல் பார்த்து விட்டு நடிக்கப்போகிறாராம் ராய்லட்சுமி. 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget