மைக்ரோசாப்ட் பேண்ட் பிட்னஸ் டிராக்கர்

மைக்ரோசாப்ட் நிறுவனம் $199 (சுமார் ரூ.12,000) விலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மைக்ரோசாப்ட் பேண்ட் என்று அழைக்கப்படும்
ஃபிட்னஸ் டிராக்கரை வெளியிட்டது. மைக்ரோசாப்ட் பேண்ட், அமெரிக்க நிறுவனத்தின் ஆன்லைன் மற்றும் சில்லறை விற்பனையாளர் கடையில் ​​வியாழக்கிழமை முதல் தொடங்கி கிடைக்கிறது.

ரெட்மாண்ட் நிறுவனத்தின் பேண்ட் ஃபிட்னஸ் டிராக்கரை ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், மற்றும் விண்டோஸ் போன் சாதனங்களுக்கு ஏற்றதாக உள்ளது. உரை, மின்னஞ்சல், மற்றும் ட்விட்டர் எச்சரிக்கை செய்து அணுகக்கூடியதாக மெலிந்த தொடுதிரை (குறிப்பிடப்படாத அளவு) அம்சங்களை கொண்டுள்ளது, மேலும் பேண்ட் படிகள், இதய துடிப்பு, மற்றும் இன்னும் பலவற்றை கண்டறிவதற்கு 10 வெவ்வேறு சென்சார்களை உள்ளடக்கியுள்ளது.

மைக்ரோசாப்ட் பேண்டில் மன அழுத்தம் அளவு, சூரிய ஒளி வெளிப்பாடு மற்றும் ஒரு கால்வனிக் தோல் ரெஷ்பான்ஸ் அளவீட்டை அடையாளம் கண்டறிய உள்ளமைக்கப்பட்ட யூவி சென்சார் கொண்டுள்ளது. மைக்ரோசாப்ட் படி, விண்டோஸ் போன் 8.1 பயனர்கள் தங்களின் குறிப்புகளை எடுக்கவோ அல்லது பேண்டிலிருந்து அவர்களது குரலின் மூலம் நினைவூட்டல்கள் அமைத்ததையோ Cortana வில் கேட்கலாம்.

மைக்ரோசாப்ட் பேண்டில் உள்ளமைக்கப்பட்ட ஜிபிஎஸ் உள்ளது, மேலும் Cortana வில் பயண திசைகள், போக்குவரத்து தகவல்கள், விளையாட்டு, பங்குகள், வானிலை, மற்றும் இன்னும் பலவற்றை வழங்க முடியும். உங்கள் கைகடிகாரத்தின் எதிர்பக்கத்தில் 24 மணி நேரமும் அணிந்து மிக துள்ளியமான டேடாக்களை பெறலாம் என்று 'மைக்ரோசாப்ட் கார்ப்பரேட் சாதனங்கள் மற்றும் சேவைகளின் துணைத் தலைவரான, யூசுப் மெஹ்தி' வெர்ஜில் தொடர்பு கொண்டபோது கூறியுள்ளார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget