வசூலில் 100 கோடியை தாண்டிய கத்தி

லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் கத்தி படம் கடந்த 22ஆம் தேதி தீபாவளியன்று திரைக்கு
வந்தது. நேற்றோடு 12 நாட்கள் முடிந்திருக்கிறது. முதல் நாளில் மட்டும் உலகமெங்கும் 23.8 கோடி ரூபாய் வசூலித்ததாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அறிவித்தார். அதைத் தொடர்ந்து முதல் 5 நாட்களில் மட்டும் உலகமெங்கும் 71.05 கோடி வசூலித்ததாக கத்தியின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கம் மூலம் அறிவிக்கப்பட்டது. விஜய்யின் கத்தி திரைப்படம் உலமெங்கும் 100 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ட்வீட் செய்திருக்கிறார். தற்போது 12 நாட்களில் உலகமெங்கும் 100.7 கோடி வசூலித்திருப்பதாக அனிருத் அறிவித்திருக்கிறார். அதாவது தமிழ்நாட்டில் மட்டும் 65.1 கோடி ரூபாயும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் 15.4 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் 20.2 கோடி ரூபாயும் வசூலித்திருக்கிறது என்ற பட்டியலையும் வெளியிட்டிருக்கிறார் அனிருத்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget