மேரி கோம் படத்தின் வெற்றிக்கு பிறகு ஜோயா அக்தர் இயக்கும், தில் ததக்னே தோ என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகை ப்ரியங்கா சோப்ரா.
இப்படத்தில் ரன்வீர் சிங், அனில் கபூர், பர்கான் அக்தர், அனுஷ்கா சர்மா, செபாலி ஷா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இதுநாள் வரை ஒரு நடிகையாக இருந்த வந்த ப்ரியங்கா சோப்ரா, இப்படத்தின் மூலம் இந்தி சினிமாவில் பாடகியாகவும் களம் இறங்கியுள்ளார்.
இசையில் ஆர்வமுள்ள ப்ரியங்கா சோப்ரா, ஏற்கனவே ஆல்பம் உள்ளிட்ட பணிகளையும் செய்து வருகிறார். அதுமட்டுமின்றி மேரி கோம் படத்தில், ஒரு பாட்டில் சில வரிகளை பாடியிருந்தார். இப்போது தான் முதன்முறையாக ஒரு முழுபாடலையும் பாடி, தன்னை ஒரு பாடகியாகவும் நிரூபித்துள்ளார். பாலிவுட் படத்தில் ப்ரியங்கா சோப்ரா பாடியிருக்கும் முதல்பாடல் இதுவாகும்.
தான் லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு புறப்படும் முன்பாக இப்படத்தின் பாடலை பாடி முடித்து கொடுத்து சென்றார் ப்ரியங்கா. பந்த்ரா ஸ்டுடியோவில், ஷங்கர்-எக்சன்-லாயின் இசையில், ப்ரியங்கா சோப்ரா பாடிய பாடல் சமீபத்தில் பதிவு செய்யப்பட்டது. ப்ரியங்கா பாடியிருக்கும் பாடல் அருமையாக வந்துள்ளதாக கூறுகின்றனர் படக்குழுவினர். விரைவில் இப்பாடலுக்கான ஷூட்டிங் படமாக்கப்பட இருக்கிறது.
இப்படத்தில் ரன்வீர் சிங், அனில் கபூர், பர்கான் அக்தர், அனுஷ்கா சர்மா, செபாலி ஷா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இதுநாள் வரை ஒரு நடிகையாக இருந்த வந்த ப்ரியங்கா சோப்ரா, இப்படத்தின் மூலம் இந்தி சினிமாவில் பாடகியாகவும் களம் இறங்கியுள்ளார்.
இசையில் ஆர்வமுள்ள ப்ரியங்கா சோப்ரா, ஏற்கனவே ஆல்பம் உள்ளிட்ட பணிகளையும் செய்து வருகிறார். அதுமட்டுமின்றி மேரி கோம் படத்தில், ஒரு பாட்டில் சில வரிகளை பாடியிருந்தார். இப்போது தான் முதன்முறையாக ஒரு முழுபாடலையும் பாடி, தன்னை ஒரு பாடகியாகவும் நிரூபித்துள்ளார். பாலிவுட் படத்தில் ப்ரியங்கா சோப்ரா பாடியிருக்கும் முதல்பாடல் இதுவாகும்.
தான் லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு புறப்படும் முன்பாக இப்படத்தின் பாடலை பாடி முடித்து கொடுத்து சென்றார் ப்ரியங்கா. பந்த்ரா ஸ்டுடியோவில், ஷங்கர்-எக்சன்-லாயின் இசையில், ப்ரியங்கா சோப்ரா பாடிய பாடல் சமீபத்தில் பதிவு செய்யப்பட்டது. ப்ரியங்கா பாடியிருக்கும் பாடல் அருமையாக வந்துள்ளதாக கூறுகின்றனர் படக்குழுவினர். விரைவில் இப்பாடலுக்கான ஷூட்டிங் படமாக்கப்பட இருக்கிறது.
கருத்துரையிடுக