நெத்திலி மீன் கூட்டு

தேவையான பொருட்கள்:

நெத்திலி மீன் -1/2 கிலோ

சாம்பார் வெங்காயம் – 200 கிராம்

தக்காளி -100 கிராம்(நறுக்கியது)


பச்சை மிளகாய் -4 (கீறியது)

புளி – கோலியளவு

உப்பு, எண்ணைய் -தேவைக்கேற்ப

அரைக்க:

தேங்காய் -1/4 மூடி

இஞ்சி -சிறு துண்டு

பூண்டு -4 பல்

மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்

தாளிக்க:

சோம்பு -1 டீஸ்பூன்

கறிவேப்பிலை -சிறிதளவு

செய்முறை:

மீனை சுத்தம்செய்து கொள்ளவும். மசாலாவை அரைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

அரைத்த மிளகாய், புளிக்கரைசல், மற்றும் போதுமான உப்பு சேர்த்து கிளறவும்.

இந்த கலவை கொதித்ததும் நெத்திலி மீனை சேர்க்கவும். குறைந்த தீயில் சில நிமிடங்கள் வைத்திருந்து நன்கு திக்காகி கூட்டு பதத்தில் வந்ததும் இறக்கி விடவும். சாதத்தில் ஊற்றி சாப்பிடும்போது சூப்பர் சுவையை உணர்வீர்கள்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget