இந்தியாவின் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ஷங்கர்

சேது, பிதாமகன் என விக்ரமை டைரக்டர் பாலா ஒரு மாறுபட்ட கோணத்தில் சித்தரித்த நிலையில், அந்நியன் படத்தில் அவரை நடிக்க வைத்த
ஷங்கரோ, ஒரு புதிய பரிமாணத்தில் அவரை வெளிப்படுத்தினார். குறிப்பாக, ஒரே படத்தில் அம்பி, அந்நியன், ரெமோ என மூன்று விதமான வேடங்களில் அவரை நடிக்க வைத்து ஒரு பெரிய ரேஞ்சுக்கு கொண்டு சென்றார். அதனால் இந்திய அளவில் பேசப்படும் நடிகரானார் விக்ரம்.

அதையடுத்து இப்போது இயக்கியுள்ள ஐ படத்தில் பாலிவுட், ஹாலிவுட் நடிகர்களே பிரமிக்கும் வகையில், விக்ரமை வித்தியாசமான கெட்டப்பில் நடிக்க வைத்திருக்கிறார் ஷங்கர். இதற்காக அவர் வருடக்கணக்கில் உழைத்திருக்கிறார் என்றபோதும், அந்த உழைப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறாராம் ஷங்கர். அந்த வகையில் ஐ படத்தின் டீசர்களைப்பார்த்து விட்டு சில பாலிவுட் ஹீரோக்கள் தங்களது பிரமிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதனால், ஐ படத்தில் நடிக்க தனக்கு சான்ஸ் கொடுத்ததற்காக ஷங்கருக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவிக்கும் விக்ரம், இதுவரையில் நாமெல்லாம் ஹாலிவுட் டைரக்டர்களைத்தான் பிரமிப்போடு பார்த்து வந்தோம். ஆனால், இப்போது அவர்களுக்கு இணையான ஒரு டைரக்டர் நம்ம ஊரிலேயே இருக்கிறார். அவர்தான் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர். என்னப்பொறுத்தவரை ஹாலிவுட் டைரக்டர் ஸ்டீவன் ஸ்பீல் பெர்க்கிற்கு இணையானவர் ஷங்கர். இந்தியாவின் ஸ்பீல் பெர்க் இவர்தான் என்கிறார் விக்ரம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget