திருமணமா எரிமலையாய் வெடிக்கும் த்ரிஷா

த்ரிஷா பற்றிய திருமணச் செய்தி தான் தென்னிந்திய திரையுலகில் கடந்த வாரம் ஹாட் ஆன செய்தியாக உலாவந்தது. எங்கிருந்தோ
கிளம்பிய அந்தச் செய்தி, சக நடிகை ஒருவர் கிண்டலடித்தத்தைத் தொடர்ந்து மேலும் சூடாக ஆரம்பித்தது. இருந்தாலும், இன்னமும் அதன் சூடு குறையவில்லை என்றே தோன்றுகிறது. அந்த செய்தி வெளியானபோதே, த்ரிஷா தரப்பிலிருந்து அவரே, ட்வீட்டும் போட்டு விட்டார், அவருடைய அம்மா உமாவும், பத்திரிகையாளர்களைத்தொடர்பு கொண்டு விளக்கம் கொடுத்துவிட்டார்.ஒரு வாரம் ஆனபின்னும், அந்த திருமணச் செய்தி இன்னமும் புகைந்து கொண்டுதானிருக்கிறது. அவரவர் பங்கிற்கு புலனாய்வு செய்து, திருமணம் பற்றி வெளிவந்த செய்தியை, த்ரிஷா தரப்பு ஏன் மறுக்கிறது என்ற ரீதியில், தற்போது எழுதி வருகிறார்கள். இன்று வெளிவந்த ஒரு வார இதழில் கூட அதுபற்றிய கவர்ஸ்டோரி தான் வந்திருக்கிறது. இது த்ரிஷாவை மேலும் கோபப்படுத்தியுள்ளது போலும். சற்று முன்னர், டிவிட்டரில் அதுகுறித்து ஒருபதிவை போட்டிருக்கிறார், “என்னைப்பற்றி உலவும் செய்திகளைப் பார்த்தால் எனக்கு வேடிக்கையாகவும், போராகவும் இருக்கிறது. இதவிட்டுட்டு, அடுத்த வேலை ஏதாவது இருந்தால் பாருங்க. அடுத்த டாபிக் என்ன...?,” என அவர் காட்டமாகவே கேட்கிறார்
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget