சானியாதாராவின் நயன நம்பிக்கை

தெலுங்கு பெண்ணான சானியாதாரா ஒருவர் மீது இருவர் சாய்ந்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நயன்தாரா மாதிரி சாதிக்கலாம்
என்ற ஆசையில் இங்கேயே செட்டிலாகிவிட்டார். பனிவிழும் மலர்வனம், அதுவேற இது வேற என்ற இரண்டு படங்கள் வெளிவந்தது. அவைகள் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை.

தற்போது நெடுஞ்சாலை ஆரியுடன் கடை எண் 6, அட்டக்கத்தி தினேசுடன் வாராயோ வெண்ணிலாவே, என்ற இருபடங்களை மிகவும் நம்பி இருக்கிறார். இது தவிர ஹரிகுமாருடன் சங்கராபுரம், எல்லாம் நீதானே, மெற்மறந்தேன் படங்களும் ரிலீசுக்கு காத்திருக்கிறது.

அடுத்தடுத்து நான்கு படங்கள் வெளிவர இருந்தாலும் சானியா மிகவும் நம்புவது வாராயோ வெண்ணிலாவே படத்தைத்தான். இதுதவிர மெய்மறந்தேன் படத்தில் கஷ்டப்பட்டு வேறு நடித்திருக்கிறாராம். படத்தில் பெல்லி டான்செல்லாம் ஆடியிருக்கிறார். வெளிவர இருக்கும் 4 படங்களில் ஒன்று கைகொடுத்தாலும் அப்படியே பெரிய நடிகையாகி நயன்தாராவாகிவிடலாம் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார் சானியாதாரா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget