சமந்தாவின் வீரதீர செயல்கள்

தமிழ், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் சமந்தா, குதிரையேற்றப் பயிற்சி பெற ஆரம்பித்திருக்கிறார்.
பொதுவாக, ஹீரோக்கள்தான் இது போன்ற பயிற்சிகள், சண்டைப் பயிற்சிகள், ஆகியவற்றில் ஈடுபடுவார்கள். அப்படியிருக்க சமந்தா குதிரையேற்றப் பயிற்சி பெறுவதற்கான காரணம், ஒரு படத்தில் நடிப்பதற்காகத்தானாம். அவரும், த்ரிஷாவும் இணைந்து 'கோடி' என்ற ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்க உள்ளார்களாம். அந்தப் படத்தில் குதிரையேற்றம் உட்பட சில வீரதீர செயல்களைப் புரிய வேண்டியுள்ளதாம். அதைச் சரியாகச் செய்வதற்கே இந்தப் பயிற்சி என்கிறார்கள்.

'நான் ஈ' படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கி வரும் 'பாகுபலி' படத்தில் சமந்தாவிற்கும் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால், அவருக்கு குதிரையேற்றம் தெரியாததால் அந்த வாய்ப்பு தமன்னாவிற்குக் கிடைத்துவிட்டதாம். மீண்டும் அப்படி ஒரு நிகழ்வு நடக்க வேண்டாமென்பதால்தான் சமந்தா தற்போது குதிரையேற்றப் பயிற்சியை ஆரம்பித்திருக்கிறார் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமந்தாவுடன், த்ரிஷா மீண்டும் இணைந்து நடிக்க உள்ள இந்தப் படம் விரைவில் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் த்ரிஷா நாயகியாகவும், சமந்தா கிளைமாக்ஸ் சமயத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்கள். தெலுங்கில் 'ஏ மாயா சேசவே' என்ற பெயரில் வெளியான அந்தப் படத்தில் த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருந்தார். அந்தத் தெலுங்குப் படத்தின் மாபெரும் வெற்றிதான் சமந்தாவை இன்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வைத்திருக்கிறது. சமந்தாவும், த்ரிஷாவும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget