கோலிவுட்டை மிரட்ட வரும் காத்தம்மா

தமிழ், மலையாளம் உட்பட பல மொழிகளில் ஏறக்குறைய ஐம்பது படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்திருப்பவர் ஒளிப்பதிவாளர் எம்.டி.சுகுமார்.
இவர் தற்போது இயக்கும் படம் ‘காத்தம்மா’. இதில் பிஜு கதாநாயகனாகவும் ஆதிரா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். மேலும் அசோக்ராஜ், சிவாஜிமல்லிகா, கோவை சரளா, அலி, ரவீந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஜில்லன் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.சுகுமாரே ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார்.

பெரும்பாலான படங்களில் பாதிக்கப்பட்ட ஆண்கள் வெகுண்டெழுந்து எதிரிகளை கொல்வது, பழிவாங்குவது தான் முன்னிலைப்படுத்தப்படுகிறது. ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணான காத்தம்மா எப்படி பழிவாங்குகிறாள் என்பதை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த கதைக்காக புதுமுகமான ஆதிரா பல பயிற்சிகளை எடுத்து தன்னை தயார்படுத்திக் கொண்டு அதன் பிறகுதான் நடிக்கவே ஆரம்பித்திருக்கிறார். எல்லோராலும் ரசிக்கும்படியான கமர்ஷியல் படமாக உருவாக்கி வருகிறார்கள். கம்பம், தேனி, திண்டுக்கல், மதுரை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget