பாவாடை தாவணியில் எமி ஜாக்சன்

ஷங்கர் இயக்கதில் விக்ரம் நடித்துள்ள ஐ படத்தை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் எமி ஜாக்சன். ஐ வெளிவந்த பிறகு சம்பளத்தை கூட்டி
நடிக்கலாம் என்று காத்திருந்தார். ஆனால் படம் தாமதமாகவே, இருக்கிற வாய்ப்பை இழக்க வேண்டாம் என்ற இரண்டு படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். ஒன்று உதயநிதி நடிக்கும் படம், அஹமது இயக்குகிறார். அடுத்து வேலையில்லா பட்டதாரி டீமின் புதிய படம். இரண்டிலுமே அடக்கமான பெண் கேரக்டர் குறிப்பாக உதநிதி ஸ்டாலின் படத்தில் கிராமத்து பெண் கேரக்டர்.

ஐ படத்தில் எமி மாடலிங் பெண்ணாக நடித்திருக்கிறார். இதனால் சேலை கட்டி நடிக்கும் வாய்ப்புகள் குறைவு. ஆனால் உதயநிதி படம் முழுக்க பாவாடை தாவணி, சேலை கட்டித்தான் நடிக்க வேண்டும் என்பதால் இப்போதே பாவாடை தாவணி, சேலை கட்டி பழகி வருகிறார். பொது நிகழ்ச்சிகளுக்கு சேலையில் வருகிறார். இடையில் மாஸ் படத்திலிருந் விலகியதற்கு காரணம் அவர்கள் அவரிடம் சொன்ன கதை வேறாம். எடுக்க இருந்த கதை வேறாம். அதனால் அந்தப் படத்திலிருந்து விலகி விட்டாராம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget