உடனடியாகச் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள உதவும் இன்ஸ்டாகிராம் அப்ளிகேஷனைத் தற்போது 30 கோடி பேர் தொடர்ந்து
பயன்படுத்துவதாக இந்நிறுவனத்தின் வலைமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ”இன்ஸ்டாகிராம் சமுதாயம் தொடர்ந்து விரிவதனைப் பார்த்து நாங்கள் மிக்க மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம். எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்கள் உணர்வுகளை, தகவல்களை, படங்களை எங்கள் மூலமாகப் பகிர்ந்து கொள்வது எங்களுக்கு மகிழ்ச்சியும் ஆச்சரியத்தையும் அளிக்கிறது. தொடர்ந்து நல்ல முறையில் சேவை செய்திட முயற்சிக்கிறோம்” என அதில் தரப்பட்டுள்ளது.
சென்ற மார்ச் மாத இறுதியில் 20 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்த இன்ஸ்டாகிராம், தற்போது 30 கோடிப் பேருடன் தொடர்ச்சியாக இயங்கி வருகிறது. கடந்த ஒன்பது மாதத்தில் இது 50% வளர்ச்சியைக் கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதே காலத்தில், 28.4 கோடி தொடர் பயனாளர்களைக் கொண்ட ட்விட்டர் தளத்தினைக் காட்டிலும், இன்ஸ்டாகிராம் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
பயன்படுத்துவதாக இந்நிறுவனத்தின் வலைமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ”இன்ஸ்டாகிராம் சமுதாயம் தொடர்ந்து விரிவதனைப் பார்த்து நாங்கள் மிக்க மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம். எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்கள் உணர்வுகளை, தகவல்களை, படங்களை எங்கள் மூலமாகப் பகிர்ந்து கொள்வது எங்களுக்கு மகிழ்ச்சியும் ஆச்சரியத்தையும் அளிக்கிறது. தொடர்ந்து நல்ல முறையில் சேவை செய்திட முயற்சிக்கிறோம்” என அதில் தரப்பட்டுள்ளது.
சென்ற மார்ச் மாத இறுதியில் 20 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்த இன்ஸ்டாகிராம், தற்போது 30 கோடிப் பேருடன் தொடர்ச்சியாக இயங்கி வருகிறது. கடந்த ஒன்பது மாதத்தில் இது 50% வளர்ச்சியைக் கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதே காலத்தில், 28.4 கோடி தொடர் பயனாளர்களைக் கொண்ட ட்விட்டர் தளத்தினைக் காட்டிலும், இன்ஸ்டாகிராம் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக