ஒரு சிறிய இடைவௌிக்கு பின்னர், சினிமாவில் மீண்டும் அதே உற்சாகத்துடன் களமிறங்கியுள்ளார் நடிகர் கவுண்டமணி. தற்போது, ''வாய்மை'' என்ற படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளவர்,
அடுத்தப்படியாக ''49-ஓ'' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த இரண்டு படங்களும் விரைவில் வௌிவர உள்ள நிலையில், இப்போது புதிதாக இன்னொரு படத்திலும் கமிட்டாகியுள்ளார்.
இப்படத்திற்கு, ''எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது'' என தலைப்பு வைத்துள்ளனர். இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளர் கணபதி பாலமுருகன் இயக்கும் இப்படத்தில் கவுண்டமணி ஹீரோவாக நடிக்கிறார். இதில் கவுண்டமணி உபயோகப்படுத்தும் கேரவன் மிகுந்த பொருட்செலவில் அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. டி-ஷர்ட், ஜீன்ஸ், கூலிங்கிளாஸ் என... ஒரு டீன்-ஏஜ் பையன் போன்று தோற்றமளிக்கிறார் கவுண்டமணி. முழுக்க முழுக்க காமெடி படமாகும் உருவாகும் இப்படத்தில், கவுண்டமணியின் பட்டைய கிளப்பும் காமெடிகள் எப்போதையும் விட இந்தப்படத்தில் அதிகமாக இருக்கும் என்கிறார் இயக்குநர்.
அடுத்தப்படியாக ''49-ஓ'' என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த இரண்டு படங்களும் விரைவில் வௌிவர உள்ள நிலையில், இப்போது புதிதாக இன்னொரு படத்திலும் கமிட்டாகியுள்ளார்.
இப்படத்திற்கு, ''எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது'' என தலைப்பு வைத்துள்ளனர். இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளர் கணபதி பாலமுருகன் இயக்கும் இப்படத்தில் கவுண்டமணி ஹீரோவாக நடிக்கிறார். இதில் கவுண்டமணி உபயோகப்படுத்தும் கேரவன் மிகுந்த பொருட்செலவில் அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. டி-ஷர்ட், ஜீன்ஸ், கூலிங்கிளாஸ் என... ஒரு டீன்-ஏஜ் பையன் போன்று தோற்றமளிக்கிறார் கவுண்டமணி. முழுக்க முழுக்க காமெடி படமாகும் உருவாகும் இப்படத்தில், கவுண்டமணியின் பட்டைய கிளப்பும் காமெடிகள் எப்போதையும் விட இந்தப்படத்தில் அதிகமாக இருக்கும் என்கிறார் இயக்குநர்.
கருத்துரையிடுக