கோலிவுட் டீச்சர் பிந்துமாதவி

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஒரு டீச்சர் வேடத்தில் நடித்தார் பிந்துமாதவி. கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்தபோது
சிவகார்த்திகேயனுடன் ஏற்பட்ட நட்பு காரணமாக அந்த சிறிய வேடத்தில் நடிக்க சம்மதித்தார் பிந்து. ஆனால், அதையடுத்து, அவர்களை இணைத்து கிசுகிசுக்கள் பரவத் தொடங்கின. அதோடு, அந்த பிரச்சினை சிவகார்த்திகேயனின் வீட்டிற்குள்ளும் சூறாவளியை ஏற்படுத்தியதாக அப்போது பரபரப்பு செய்திகள் வெளியாகின.

விளைவு, தான் கேட்டுக்கொண்டதற்காக தனது படத்தில் சிறிய வேடத்தில் நடிக்க சம்மதித்த பிந்துமாதவிக்கு அடுத்தபடியாக ஹீரோயினி சான்ஸ் தருவதாக வாக்குறுதி அளித்திருந்த சிவகார்த்திகேயன், பின்னர் பிந்துமாதவியை ஓரங்கட்டினார். அவர் மட்டுமின்றி, அவரை சார்ந்த நடிகர்களும் பிந்துவை கண்டுகொள்ளவில்லை,. அதனால் ஏறுமுகத்தில் செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்த பிந்துமாதவி, பெரிய சறுக்கலை சந்தித்தார்.

அதையடுத்து ஆந்திராவுக்கு சென்ற இடத்திலும் படவாய்ப்புகள் இல்லாமல் கோலிவுட்டையே தஞ்சமடைந்துள்ள பிந்துமாதவி, இப்போது கிடைக்கிற வாய்ப்புகளை பயன்படுத்தத் தொடங்கி விட்டார். விளைவு, தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தில் வளர்ந்து வரும் நடிகர் அட்டகத்தி தினேசுடன் நடித்தவர், இப்போது தெகிடி ஹீரோ அசோக் செல்வனுக்கு ஜோடியாக சவாலே சமாளி படத்தில் நடிக்கிறார். இதையடுத்து வந்தது வரைக்கும் லாபம் என்று மேலும் சில வளர்ந்து கொண்டிருக்கும் ஹீரோக்களுடன் நடிப்பதற்கும் ஓகே சொல்லியிருக்கிறார் பிந்துமாதவி.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget