ஆடவரிடம் சவால் விடும் பெண்கள்

இந்த தருணத்தில், சில வேலைகள் எல்லாம் செய்ய எங்களை விட்டால் ஆளில்லை, ஆண்கள் அந்த வேலைகளுக்கு எல்லாம் சரிவரமாட்டார்கள் என
சவால் விட்டிருக்கின்றனர் பெண்கள். சவால் விட்டது மட்டுமில்லாமல் அதை ஒரு பட்டியலிட்டும் கூறியிருக்கின்றனர். 

அவை என்னவென்று பார்க்கலாம். சூழ்நிலை சமயங்களுக்கு ஏற்ப தங்களது மனநிலையையும், வேலை செய்யும் முறையும் மாற்றிக் கொள்ளும் ஆற்றல் உடையவர்கள் பெண்கள். சாமார்த்தியமாக செயல்படும் குணம் அவர்களது டி.என்.ஏ'வில் கொஞ்சம் மிகுதியாக அச்சிடப்பட்டிருகிறது. இதன் காரணமாக தான் ஐ.க்யூ. அளவிலும் அவர்களே முன்னிலையில் இருக்கின்றனர். 

எந்த இடத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளும் பெண்கள் தான் நமக்கு சமைத்து சோறு போடுகின்றனர். இந்த விஷயத்தில் நூறு சதவீதம் பின்தங்கி இருக்கின்றனர் ஆண்கள்! நேர்முகத்தேர்வுகளில் ஆண்களை விட பெண்கள் தான் சிறப்பாக செயல்படுகின்றனர் என பல பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களின் எச்.ஆர்.கள் கூறுகிறார்கள். 

ஆம் இருக்கலாம், ஆண்களின் மூணு நாள் தாடியும், முழுக்கை சட்டையை முக்கால் கையாக மடித்துவிட்டு செல்லும் செயல்களை கண்டு அவர்கள் கடுப்பாகி இவ்வாறு கூறியிருக்கலாம். வாகனம் ஓட்டுவதிலும், சாலை பாதுகாப்பிலும், ஆண்களை விட பெண்கள் தான் சிறந்தவர்களாக இருக்கின்றனர். ஆகவே, பாதுகாப்பில் பெண்களே சிறந்தவர்கள் என கூறுகின்றனர்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget