செகண்ட் ஹீரோயினா நானா ஸ்ரீதிவ்யா

விஷாலுடன் மருது படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா, தற்போது காஷ்மோரா, சங்கிலி புங்கிலி கதவை தொற ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் கார்த்தியின் காஷ்மோரா படத்தில் ஸ்ரீதிவ்யா
கமிட்டானபோது நயன்தாரா மட்டும்தான் அந்த படத்தில் இருந்தார். அதனால், இரண்டாவது நாயகியாக கமிட்டானார். ஆனால் அதையடுத்து இன்னொரு நாயகியாக மனீஷா யாதவும் அந்த படத்தில் இணைந்தார். இதனால் மூன்று நாயகிகள் உள்ள படத்தில் வந்து சிக்கிக்கொண் டோமே என்று அதிருப்தி மனநிலையுடன் இருந்தார் ஸ்ரீதிவ்யா.

ஆனபோதும், அதையடுத்து விஷாலின் மருது படத்தில் சிங்கிள் ஹீரோயினி வேடம் கிடைத்ததால் உற்சாகமாக அந்த படத்தில் நடித்தார் ஸ்ரீதிவ்யா. அந்த படம் வெளியான பிறகு இப்போது ஜீவாவின் சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தில் நடித்து வருகிறார். ஆனால், அவர் காஷ்மோரா படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருப்பதை அறிந்து சில டைரக்டர்கள் செகண்ட் ஹீரோயினி வேடத்தில் நடிக்க ஸ்ரீதிவ்யாவை அழைக்கிறார்களாம். இதனால் அதிர்ச்சியடைந்துள்ள அவர், காஷ்மோரா படத்தில் நயன்தாரா இருந்தபோதும், நானும் அவருக்கு இணையான இன்னொரு நாயகியாகத்தான் நடிக்கிறேன். இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கும் கார்த்திக்கு நானும் ஒரு ஜோடியாக நடித்துள்ளேன். அந்த படம் திரைக்கு வரும்போது உங்களுக்கே தெரியும் என்று சொல்லி, செகண்ட் ஹீரோயினி வேடங்களில் நடிக்க மறுத்து வருகிறார் ஸ்ரீதிவ்யா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget