சின்னத்திரை நாயகி ஜீவிதா

ஏவிஎம் தயாரித்த 'மனதில் உறுதி வேண்டும்' தொடர் மூலம் அறிமுகமானவர் ஜீவிதா. அதன் பிறகு 'வைராக்யம்', 'ஆபீஸ்', 'தேவதை', 'பைரவி', '63 நாயன்மார்கள்', 'சித்திரம் பேசுதடி' தொடரில் நடித்தார். தற்போது 'பாசமலர்', 'கைராசி குடும்பம்'
தொடரில் நடித்து வருகிறார். பாசமலர் உமா கேரக்டர் இப்போது மிகவும் பிரபலம்.

அவ்வப்போது சினிமாவிலும் நடித்து வரும் ஜீவிதாவுக்கு சினிமாவில் பெயர் சொல்லும் அளவிற்கு வாய்ப்புகள் அமையவில்லை. சின்னத்திரையின் சுஹாசினி என்ற பட்டப்பெயரும் இவருக்கு உண்டு. பைரவி, மனதில் உறுதி வேண்டும் தொடர்களில் சுஹாசினியை நினைவுபடுத்துகிற வகையில் தான் நடித்தார். “நதியா, ரேவதி, சுஹாசினி மாதிரி ஹோம்லியான நடிகையாகவே நீடிக்க வேண்டும், சினிமாவோ, சீரியலோ கடைசி வரை நடித்துக கொண்டே இருக்க வேண்டும்” என்கிறார் ஜீவிதா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget