பாலிவுட் கனவு நாயகி கஜோல்

பாலிவுட் சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை கஜோல். நடிகர் அஜய் தேவ்கனை திருமணம்
செய்த பிறகு சினிமா வாய்ப்பை குறைத்து கொண்ட கஜோல், தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். முதற்கட்டமாக அவர், தனது கணவரின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனக்கு புதியவர்களுடன் பணியாற்ற எந்த பிரச்னையும் இல்லை என்று கூறியுள்ளார் கஜோல்.

இதுகுறித்து கஜோல் மேலும் கூறியிருப்பதாவது... ‛‛புதியவர்களுடன் பணியாற்ற நான் தயாராக உள்ளேன். ஒருபோதும் நான் அவர்களுடன் பணியாற்ற மாட்டேன் என்று கூறவில்லை. ஆனால் கதை தான் எப்பவும் ஒரு படத்தை தீர்மானிக்கும். பாலிவுட்டில் நிறைய மாற்றங்கள் வந்துள்ளது. சமீபகாலமாக நல்ல கதைகள், திறமை வாய்ந்த புதியவர்கள் தான் அதிகம் சாதிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget