நாடக நடிகை பூஜா

மாலை நேரத்து மயக்கம் படத்தில் அறிமுகமாகி, இறைவி படத்தில் விஜய் சேதுபதியின் செட்அப்பாக நடித்து புகழ் பெற்றவர் பூஜா தேவரியா. இவர் ஒரு தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். சென்னையில் நடக்கும் ஆங்கில நாடகங்களில் நடித்து வந்த பூஜா அதன்
மூலம் சினிமாவிற்கு வந்தார்.

தற்போது அவரே சொந்தமாக ஸ்ட்ரே பேக்டரி என்ற நாடக கம்பெனி நடத்தி வருகிறார். இதன் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நாடகம் நடத்தி வருகிறார். ஆங்கிலம், தமிழ், இந்தி என பல மொழி நாடங்களை நடத்தி அதில் நடித்தும் வருகிறார். சினிமா வாய்ப்புகள் நிறைய வந்தாலும் நாடகம் பாதிக்காத அளவிற்கு கவனமாக தேதி கொடுக்கிறார். நாடக பயிற்சி இருப்பதால் ஒரு டேக் நடிகையாக இருக்கும் பூஜாவுக்கு வாய்ப்புகள் குவிகிறது.

தற்போது ஆந்திரா மெஸ், மோ, வல்லவனுக்கும் வல்லவன், ஆண்டவன் கட்டளை, சின்னதா ஒரு படம் என ஒரே நேரத்தில் 5 படங்களில் நடித்து வருகிறார். திரைப்படத்தில் "எவ்வளவு பெரிய நடிகையாக ஆனாலும் நாடகத்தில் நடிப்பதை விட மாட்டேன். அதுதான் எனக்குப் பெருமை" என்கிறார் பூஜா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget