பிரியா எங்கே சின்னத்திரையில் பரபரப்பு

இவரெல்லாம் சினிமாவிற்கு சென்றிருந்தால் நம்பர் ஒன் நடிகையாக வந்திருப்பார்" என்ற ஆச்சர்யத்தோடு சின்னத்திரைக்கு வந்தவர் பிரியா
பவானி சங்கர். பாண்டிச்சேரியல் பிறந்த பக்கா தமிழ் பொண்ணு. ஏர்டெல் சூப்பர் சிங்கர், கிங்ஸ் ஆஃப் டான்ஸ், ஜோடி நம்பர் ஒண் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பிலிம்ஃபேர் அவார்டை தொகுத்து வழங்கியதன் மூலம் தனிக் கவனம் பெற்றார்.காதல் முதல் கல்யாணம் வரை தொடரில் நடிக்க ஆரம்பித்தார். ப்ரியாவின் அழகு காரணமாக தொடரும் டி.ஆர்.பி ரேட்டிங்கில் எகிறியது.

எல்லாம் நன்றாக போய்கொண்டு இருக்கும்போது "நான் ராஜ் என்பவரை காதலிக்கிறேன். அவரையே திருமணம் செய்து கொண்டு ஆஸ்திரேலியாவில் செட்டிலாகப் போகிறேன்" என்று பேஸ்புக்கில் அறிவித்தவர் பின்பு கல்யாணம் முதல் காதல் வரை தொடரிலிருந்து வெளியேறினார். இது தொடரை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி என்றால் தொடரை ஒளிபரப்பிய சேனலுக்கு அதைவிட அதிர்ச்சி. மீண்டும் அவரை நடிக்க வைக்க சேனல் எடுத்த எந்த முயற்சியும் பலிக்கவில்லை.

திருமணம் செய்து கொண்டு செட்டிலாகப்போகிறேன் என்று அறிவித்த பிரியா பற்றி அதன் பிறகு எந்த தகவலும் இல்லை. அவர் சமூக வளைத்தளங்களிலும் முன்புபோல ஆக்டிவாக இல்லை. அவர் திருமணம் செய்து கொண்டு ஆஸ்திரேலியா சென்று விட்டார் என்றும், திருமணமாகமலேயே காதலரை காண சென்றுவிட்டார் என்றும், காதலர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள் என்றும், குடும்பத்தினர் திருமணத்திற்கு சம்மதிக்க வில்லை அதனால் அப்செட்டில் பிரியா வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார் என்றும், அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது அதனால்தான் சிலர் அவரது பேஸ்புக்கில் நலம்பெற பிரார்த்தித்து ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார்கள் என்றும் சின்னத்திரை வட்டாரத்தில் பல செய்திகள் சிறகடித்து பறந்து கொண்டிருக்கிறது. ப்ரியாவே நேரடியாகவோ அல்லது தனது சமூக வளைத்தளத்திலோ இதற்கு பதில் அளித்தால்தான் இந்த பரபரப்பு அடங்கும் என்கிறார்கள் சின்னத்திரை வட்டாரத்தினர்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget