மீன் பிரியாணி செய்வது எப்படி

பாசுமதி அரிசி - 2 கப்
தண்ணீர்- தேவையான அளவு
ஏலக்காய் - 4
கிராம்பு - 4
பட்டை- 1

சீரகம் - 1 தேக்கரண்டி
பிரியாணி இலை - 2
உப்பு - 3 தேக்கரண்டி

மீன் வறுக்க :

மீன் துண்டுகள் - 1/2 கிலோ
உப்பு - சிறிது
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - சிறிது
எண்ணெய் - 1/4 கப்

பிரியாணிக்கான :

பிரியாணி இலை - 1
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி
தக்காளி - 1
தயிர் - 1 கப்
புதினா இலைகள் - 1/2 கப்
கொத்தமல்லி இலை - 1/2 கப்
உப்பு - சிறிது

குங்குமப்பூ பால் :

குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
சூடான பால் - 1/4 கப்


எப்படிச் செய்வது?

ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி ஏலக்காய், கிராம்பு, பட்டை, சீரகம், பிரியாணி இலை, பாசுமதி அரிசி சேர்த்து வேக விடவும். அரிசி வெந்த பின் தண்ணீரை வடித்து வைக்கவும். இப்போது மீன் துண்டுகளை எடுத்து அதில் உப்பு, மிளகாய்த்தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து பிசைந்து வைக்கவும். ஒரு கனமான கடாயில் எண்ணெய் ஊற்றி மீன் துண்டுகளை போட்டு பொறித்து எடுக்கவும். அதே கடாயில் பிரியாணி இலை, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பின் மிளகாய்த்தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள், கரம் மசாலா தூள், தக்காளி சேர்த்து தண்ணீர் ஊற்றி சமைக்கவும்.

பின்னர் சிறிது உப்பு ஒரு கொத்து புதினா, கொத்தமல்லி இலைகள், தயிர் சேர்த்து கலந்து வேகும் வரை சமைத்து பின் சமமாக அரிசியை அவற்றில் பரவி சிறிது புதினா, கொத்தமல்லி இலைகள் தூவி குங்குமப்பூ பால் சேர்த்து மீன் துண்டுகளை அதின் மேல் வைத்து மூடி போட்டு மூடவும். ஒரு கனமான தவா எடுத்து அடுப்பில் வைத்து அதில் கடாயை வைத்து தம் போடவும். சிறிது நேரம் ஆவியில் வேக விடுவும். சுவையான மீன் பிரியாணி தயார்.

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget