தேங்காய் பால் சிக்கன் கிரேவி செய்வது எப்படி

சிக்கன் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 2
மிளகுத்தூள் - 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
சீரகத்தூள்  2 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 5
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
தயிர் - 3 ஸ்பூன்
தேங்காய் பால் - ஒரு கப்
கறிவேப்பிலை, மல்லி - தேவையான அளவு


எப்படிச் செய்வது?

சிக்கனை பொடியாக நறுக்கவும். இத்துடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, தயிர் சேர்த்து முக்கால் மணி நேரம் ஊற வைக்கவும். வாணலியில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி சிறிது நேரம் வேக விடவும். வெந்ததும் ஊறிய சிக்கனை சேர்த்து கிளறவும். இதில் காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு மிளகுத்தூள், சீரகத்தூளை சேர்த்து நன்றாக கிளறவும்.

பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வேகவிடவும். 10 நிமிடம் கழித்து, சிக்கன் வெந்ததும் தேங்காய் பாலை சேர்க்கவும். சிக்கன் கிரேவியாக வந்ததும் மல்லித்தழை தூவி இறக்கவும். அவ்வளவுதான்.. தேங்காய் பால் சிக்கன் கிரேவி ரெடி. சாதத்திற்கு மட்டுமல்ல... டிபன் அயிட்டங்களுக்கும் தொட்டு உண்ணலாம். செம டேஸ்டாக இருக்கும்...!

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget