குடைமிளகாய் கிரேவி செய்வது எப்படி

நறுக்கிய குடைமிளகாய் - 1 கப்,
நறுக்கிய வெங்காயம் - 1 கப்,
தக்காளி - 1 கப்,
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,

தனியா தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்,
முந்திரி - 5,
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்,
சீரகம் - சிறிது,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
கொத்தமல்லித்தழை - சிறிது.


எப்படிச் செய்வது?

முந்திரியை 15 நிமிடம் ஊற வைத்து தேங்காய்த்துருவலுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து சீரகம் தாளித்து வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து நன்கு வதக்கி மிளகாய்த்தூள், தனியா தூள், உப்பு, குடைமிளகாய் போட்டு வதக்கி, அரைத்த விழுது சேர்க்கவும். அனைத்தும் சேர்ந்து நன்கு கொதித்து வந்ததும் கொத்தமல்லித்தழையை தூவி இறக்கவும்.

குறிப்பு : தேவையானால் பனீரை குடைமிளகாய் வதக்கிய பின்பு சேர்க்கலாம்.

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget