நிருபர் வேடத்தில் கலக்கும் ஜனனி

அவன் இவன், பாகன், தெகிடி படங்களுக்குப்பிறகு தமிழ் சரியான படங்கள் இல்லாமல் மலையாளத்துக்கு சென்று விட்டார் ஜனனி. ஆனபோதும் தமிழ்நாட்டு பெண்ணான அவருக்கு தமிழ் படங்களில் பெரிய அளவில் சாதிக்க
வேண்டும் என்ற ஆசை இருந்ததால் தொடர்ந்து புதிய படங்களுக்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தவர் பலூன், அதே கண்கள் படங்கள் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார்.

இதில் ஜெய்யுடன் பலூன் படத்திலும், அதே கண்களில் கலையரசனுடனும் நடிக்கும் ஜனனி, விரைவில் திரைக்கு வரும் அதே கண்கள் படம் தனக்கு தமிழில் நல்லதொரு ரீ-என்ட்ரியாக இருக்கும் என்கிறார். இந்த படத்தில் தனது வேடம் குறித்து அவர் கூறும்போது, இந்த படத்தில் நான் ஒரு துணிச்சலான நிருபராக சாதனா என்ற கேரக்டரில் நடிக்கிறேன். எனக்கு பிடித்தமான நிருபர் வேடம் என்பதால் கதாபாத்திரத்தில் ஒன்றி நடித்துள்ளேன். மேலும், இந்த படம் ஏற்கனவே வெளியான டைட்டீல் என்றபோதும் இந்த கதைக்கு அது தேவைப் பட்டதால் அதே கண்கள் என்று வைத்துள்ளனர். அதற்கேற்றார் போல் இரண்டு கண்களை மையமாக வைத்துதான் இந்த படத்தின் கதை உருவாகியிருக்கிறது என்கிறார் ஜனனி அய்யர்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget