திரில்லர் கதையை விரும்பும்

நெடுஞ்சாலை படத்தில் அறிமுகமானவர் ஷிவதா. அந்த ஒரே படத்தில் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்திழுத்த இவர், பின்னர் ஜீரோ என்ற திரில்லர் படத்தில் நடித்தார். தற்போது வல்லவனுக்கு வல்லவன், அதேகண்கள், கட்டம் என சில
படங்களில் பரவலாக நடித்து வருகிறார். சிங்கிள் ஹீரோயினாகத்தான நடிப்பேன் என்றில்லாமல் எத்தனை ஹீரோயினிகள் நடித்தாலும் எனக்கான கேரக்டர் பிடித்திருந்தால் மறுக்காமல் நடிப்பேன் என்று சொல்லி, நடித்து வரும் ஷிவதாவுக்கு திரில்லர் கதைகளில் நடிப்பதென்றால் அதிக விருப்பமாம்.

இதுபற்றி அவர் கூறும்போது, நான் சிறிய வயதில் இருந்தே திரில்லர் படங்களை ரசித்துப் பார்ப்பேன். அதனால் நடிக்க வந்த பிறகு அந்த மாதிரி கதைகளை தேடியபோது ஜீரோ என்றொரு படம் கிடைத்தது. அது பெரிய ஹிட் இல்லை என்றாலும், வித்தியாசமான கதை. அந்த படத்தில் அதிக ஈடுபாட்டுடன் நடித் தேன். அதேபோல் தொடர்ந்து இன்னும் அதிரடியான திரில்லர் கதைகளில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன் என்கிறார் ஷிவதா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget