சென்னையில் பிறந்து வளர்ந்த மலையாள பொண்ணு அனஸ்வரா. 3 வருடங்களுக்கு முன்பு ஈகோ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படம் வெற்றி பெறாமல்
போகவே அதற்கு பிறகு வாய்ப்புகள் இல்லை. அறிவழகன் இயக்கிய வல்லினம் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தார். அதுவும் சரியாக அமையவில்லை. வெற்றி பெற்ற பேய்படமான யாமிருக்க பயமேவில் இவர்தான் பேய். படம் வெற்றி பெற்றாலும் இவர் பேசப்படவில்லை.
இப்படி சினிமாவில் போராடிக் கொண்டிருந்தவருக்கு நமோ போத்தன்னா என்ற கன்னட படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து தற்போது பட்டினப்பாக்கம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது.
பட்டினப்பாக்கம் படத்தில் கலையரசன் ஜோடியாக நடித்துள்ளார் அனஸ்வரா. இவர்கள் தவிர சாயாசிங், யோக்ஜேப்பி, ஜான் விஜய், ஆர்.சுந்தர்ராஜன், சார்லி, எம்.எஸ்.பாஸ்கர், மதன்பாப், மதுமிதா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். நடிகை பாவனாவின் அண்ணன் ஜெய்தேவ் இயக்கியுள்ளார். இஷான் தேவ் இசை அமைத்துள்ளார். ராணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரோகித் மேத்யூ தயாரித்துள்ள இந்தப் படத்தை எஸ்.பி.சினிமாஸ் வாங்கி வெளியிடுகிறது. இதன் டீசரை நேற்று இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டார். பட்டினப்பாக்கம் மூலம் அனஸ்வரா கரைசேருவாரா என்பது படம் வெளிவந்த பிறகு தெரியும்.
போகவே அதற்கு பிறகு வாய்ப்புகள் இல்லை. அறிவழகன் இயக்கிய வல்லினம் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தார். அதுவும் சரியாக அமையவில்லை. வெற்றி பெற்ற பேய்படமான யாமிருக்க பயமேவில் இவர்தான் பேய். படம் வெற்றி பெற்றாலும் இவர் பேசப்படவில்லை.
இப்படி சினிமாவில் போராடிக் கொண்டிருந்தவருக்கு நமோ போத்தன்னா என்ற கன்னட படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து தற்போது பட்டினப்பாக்கம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது.
பட்டினப்பாக்கம் படத்தில் கலையரசன் ஜோடியாக நடித்துள்ளார் அனஸ்வரா. இவர்கள் தவிர சாயாசிங், யோக்ஜேப்பி, ஜான் விஜய், ஆர்.சுந்தர்ராஜன், சார்லி, எம்.எஸ்.பாஸ்கர், மதன்பாப், மதுமிதா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். நடிகை பாவனாவின் அண்ணன் ஜெய்தேவ் இயக்கியுள்ளார். இஷான் தேவ் இசை அமைத்துள்ளார். ராணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரோகித் மேத்யூ தயாரித்துள்ள இந்தப் படத்தை எஸ்.பி.சினிமாஸ் வாங்கி வெளியிடுகிறது. இதன் டீசரை நேற்று இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டார். பட்டினப்பாக்கம் மூலம் அனஸ்வரா கரைசேருவாரா என்பது படம் வெளிவந்த பிறகு தெரியும்.
கருத்துரையிடுக