கேரள மாநிலம் திருவல்லாவில் பிறந்த உத்ரா உன்னி ஒரு பிறவி நடன கலைஞர். 4 வயது முதல் நடனம கற்று வருகிறார். நடன கலைஞர், பாடகி, மாடல், குறும்பட இயக்குனர் என பல முகங்களை
கொண்டவர் உத்ரா. 4 வருடங்களுக்கு முன்பு வவ்வால் பசங்க என்ற தமிழ் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அந்தப் படம் வெற்றிபெறவில்லை. அதனால் நடனத்தின் பக்கம் கவனத்தை திருப்பினார்.
நடனத்தின் நுன்கலையில் படிப்பில் பிஎப்ஏ பட்டம் வாங்கிய உத்ரா உன்னி, சாஸ்த்ரா யுனிவர்சிட்டியில் பரதநாட்டிய பட்டம் வாங்கினார். டாக்டர் பத்மா சுப்பிரமணியம், சாய்கிரபா சுப்பிரமணியம் ஆகியோரும் நடன நுணுக்கங்களை கற்றுக் கொண்டார். சிதம்பரம், தஞ்சாவூர் உள்பட பல இடங்களில் 100க்கும் மேற்பட்ட மேடைகளில் நடனம் ஆடியுள்ளார். நாட்டியமயூரி, நாட்டியவிலாசினி, நிருத்தியசிரோன்மணி, பத்மாவதி பிரதிப புரஷ்கார் உள்ளிட்ட பல விருதுகளை நடனத்துக்காக பெற்றிருக்கிறார். சமீபத்தில் நடந்த தேசிய பரநாட்டிய போட்டியில் 3ஆயிரம் பேர் கலந்து கொண்டதில் 15 பேர் வெற்றி பெற்றனர். அதில் உத்ரா உன்னியும் ஒருவர். அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
பல வருடங்களுக்கு பிறகு உத்தரா உன்னி எடவப்பாத்தி என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார். இதில் மனீஷா கொய்ராலா, சித்தார்த் லாமா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இதனை பிரபல எடிட்டர் லெனின் இயக்கி உள்ளார்.
உத்ரா உன்னி நடனத்தில் உச்சத்துக்கு சென்றாலும் அவரது சினிமா கனவு நிறைவேறவில்லை. அதை நிறைவேற்றிக் கொள்ள மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். சலங்கை ஒலி, சங்கராபரணம் மாதிரி ஒரு நாட்டிய படத்தில் நடிக்க வேண்டும் என்பது அவரது லட்சியம்
கொண்டவர் உத்ரா. 4 வருடங்களுக்கு முன்பு வவ்வால் பசங்க என்ற தமிழ் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அந்தப் படம் வெற்றிபெறவில்லை. அதனால் நடனத்தின் பக்கம் கவனத்தை திருப்பினார்.
நடனத்தின் நுன்கலையில் படிப்பில் பிஎப்ஏ பட்டம் வாங்கிய உத்ரா உன்னி, சாஸ்த்ரா யுனிவர்சிட்டியில் பரதநாட்டிய பட்டம் வாங்கினார். டாக்டர் பத்மா சுப்பிரமணியம், சாய்கிரபா சுப்பிரமணியம் ஆகியோரும் நடன நுணுக்கங்களை கற்றுக் கொண்டார். சிதம்பரம், தஞ்சாவூர் உள்பட பல இடங்களில் 100க்கும் மேற்பட்ட மேடைகளில் நடனம் ஆடியுள்ளார். நாட்டியமயூரி, நாட்டியவிலாசினி, நிருத்தியசிரோன்மணி, பத்மாவதி பிரதிப புரஷ்கார் உள்ளிட்ட பல விருதுகளை நடனத்துக்காக பெற்றிருக்கிறார். சமீபத்தில் நடந்த தேசிய பரநாட்டிய போட்டியில் 3ஆயிரம் பேர் கலந்து கொண்டதில் 15 பேர் வெற்றி பெற்றனர். அதில் உத்ரா உன்னியும் ஒருவர். அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
பல வருடங்களுக்கு பிறகு உத்தரா உன்னி எடவப்பாத்தி என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார். இதில் மனீஷா கொய்ராலா, சித்தார்த் லாமா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இதனை பிரபல எடிட்டர் லெனின் இயக்கி உள்ளார்.
உத்ரா உன்னி நடனத்தில் உச்சத்துக்கு சென்றாலும் அவரது சினிமா கனவு நிறைவேறவில்லை. அதை நிறைவேற்றிக் கொள்ள மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். சலங்கை ஒலி, சங்கராபரணம் மாதிரி ஒரு நாட்டிய படத்தில் நடிக்க வேண்டும் என்பது அவரது லட்சியம்
கருத்துரையிடுக