விஜயசாந்தி ஸ்டைலில் நயன்தாரா

கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன், அஜித் நடித்த பில்லா-2 ஆகிய படங்களை இயக்கியவர் சக்ரி டோல்டி. ஆனால் பிரமாண்ட பட்ஜெட்டில் இவர் இயக்கிய அந்த இரண்டு படங்களுமே தோல்வியடைந்தன. அதனால் பின்னர் இவருக்கு
எந்த முன்னணி நடிகர்களும் கால்சீட் கொடுக்கவில்லை. இருப்பினும், தற்போது நயன்தாராவுக்காக ஒரு கதையை ரெடி பண்ணி அவரிடம் சொல்லி ஓகே பண்ணியிருக்கிறார் சக்ரி டோல்டி.
சமீபகாலமாக மாயா, டோரா என திரில்லர் கதைகளில் நடித்துள்ள நயன்தாராவிடம் விஜயசாந்தி பாணியில் ஒரு ஆக்சன் ஹீரோயினி கதையை சொல்ல அப்படத்தில் நடிக்க ஒப்புதல் கொடுத்து விட்டாராம். தற்போது டோரா மற்றும் மீஞ்சூர் கோபி இயக்கிய படங்களில் நடித்து விட்ட நயன்தாரா, தற்போது கேரளாவில் ஓய்வெடுத்து வருகிறார். விரைவில் சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் அவர், அந்த படத்தை அடுத்து சக்ரி டோல்டி படத்தில் ஆக்சன் ஹீரோயினாக களமிறங்குவார் என்று கூறப்படுகிறது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget