மோர்க் குழம்பு


தேவையானவை: தேங்காய் துண்டுகள் – 2, பொட்டுக்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை
மிளகாய் – 3, பூண்டு – ஒரு பல், இஞ்சி – சிறிய துண்டு, சீரகம் – 2 டீஸ்பூன் (இவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும்), மோர் – ஒரு கப், மஞ்சள்தூள், வெந்தயம் – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங் காயம், வெண்டைக்காய் (அ) கத் திரிக்காய் வத்தல் (எண் ணெயில் வறுத்துக் கொள்ளவும்), வெள்ள ரிக்காய், கொத்தமல்லி – சிறித ளவு, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தே வையான அளவு.

செய்முறை: அடி கனமான பாத்தி ரத்தில் மோரை விட்டு, அரைத்த தேங்காய் கலவை, மஞ்சள்தூள், உப்பு போட்டு அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறவும். கலர் மாறியதும், சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, வறுத்தவத் தல், வெள்ளரிக்காயைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்து குழம்பில் கொட்டி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget