1980லிருந்து 90 வரையிலான தமிழ் சினிமாவின் காலகட்டம் கொண்டாட்டங்கள் நிறைந்தது. கருப்பு வெள்ளையில் இருந்து கலருக்கு மாறிய சினிமாவில்
அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களும், சூப்பர் நடிகைகளும் அறிமுகமாகி சினிமாவை முழு பொழுதுபோக்கு ஆக்கினார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல், ஆந்திராவில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, கேரளாவில் மம்முட்டி, மோகன்லால், கன்னடத்தில் அம்ரீஷ், ரமேஷ் அரவிந்த் போன்றவர்கள் 80களில் கலக்கியவர்கள். அதுபோலவே ராதா, அம்பிகா, நதியா, ரதிகா, சுஹாசினி என ஒரு அழகு பட்டாளமே திரண்டு வந்தது. 80களில் கலக்கிய இவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒருமுறை எங்காவது கூடி தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்கிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரின் பண்ணை வீட்டில் யாரும் அறியாமல் ரகசியமாக ஒன்றாக கூடினார்கள்.
அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களும், சூப்பர் நடிகைகளும் அறிமுகமாகி சினிமாவை முழு பொழுதுபோக்கு ஆக்கினார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல், ஆந்திராவில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, கேரளாவில் மம்முட்டி, மோகன்லால், கன்னடத்தில் அம்ரீஷ், ரமேஷ் அரவிந்த் போன்றவர்கள் 80களில் கலக்கியவர்கள். அதுபோலவே ராதா, அம்பிகா, நதியா, ரதிகா, சுஹாசினி என ஒரு அழகு பட்டாளமே திரண்டு வந்தது. 80களில் கலக்கிய இவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒருமுறை எங்காவது கூடி தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்கிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரின் பண்ணை வீட்டில் யாரும் அறியாமல் ரகசியமாக ஒன்றாக கூடினார்கள்.