கோயம்பேடு மார்க்கெட்டில் ஆதரவற்ற நான்கு சிறுவர்களான கிஷோர், பாண்டி, முருகேஷ், ஸ்ரீராம் ஆகியோர் மூட்டை தூக்கி பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.
இவர்கள் மார்க்கெட்டில் சிறு வியாபாரம் செய்யும் சுஜாதாவிடம் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கென்று எந்தவித குறிக்கோளும் இல்லாமல் பள்ளி மாணவிகளை கேலி-கிண்டல் செய்வதும் ஜாலியாக பொழுதை கழிப்பதுமாகவும் இருக்கிறார்கள்.
இவர்கள் மார்க்கெட்டில் சிறு வியாபாரம் செய்யும் சுஜாதாவிடம் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கென்று எந்தவித குறிக்கோளும் இல்லாமல் பள்ளி மாணவிகளை கேலி-கிண்டல் செய்வதும் ஜாலியாக பொழுதை கழிப்பதுமாகவும் இருக்கிறார்கள்.
இந்நிலையில் ஒருநாள் சுஜாதாவின் மகள் சாந்தினியை தெரியாமல் கிண்டல் செய்ய, அதை பார்க்கும் சுஜாதா அவர்களை திட்டி தீர்த்து விடுகிறார். அதற்கு சிறுவர்கள், நாங்கள் அனாதையாக பொறந்தது தப்பா? என்று கேட்க, அதற்கு சுஜாதா நீங்கள் பொறந்தது தப்பில்லை, தனக்கென்று அடையாளம் இல்லாமல் வாழ்வதுதான் தப்பு என்று கூறுகிறார்.