ஆந்திராவில் தமிழ் டப்பிங் படங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. மார்ச் 14 முதல் 21 வரை மட்டுமே பல தமிழ்ப் படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு
ஆந்திராவில் வெளியாக உள்ளன.
நேற்று இரு தமிழ்ப் படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஆந்திராவில் வெளியாயின. அதில் ஒன்று ஆர்யா நடித்த ராஜா ராணி, இன்னொன்று விஷால் நடித்த பட்டத்துயானை.
விஷாலின் ஆக்சன் படத்துக்கு ஆந்திராவில் ரசிகர்கள் உண்டு. அதனால் தீருடு என்ற பெயருடன் ஆந்திராவில் வெளியாகியிருக்கும் பட்டத்துயானை நாகரிகமான கலெக்சனை பெறும் என நம்புகின்றனர். ராஜா ராணியைப் பொறுத்தவரை நயன்தாராவுக்காக ஆந்திரா ரசிகர்கள் திரையரங்குக்கு வருவார்கள் என்பது படத்தை வெளியிட்டவர்களின் நம்பிக்கை.
கருத்துரையிடுக