மாயமான விமானம் எங்கே - மலாய் தகவல்

missing-flight-malaysia-airlines-boeing-777-ftr
காணாமல் போய் 9 நாட்களாகி விட்ட மலேசிய விமானத்தின் தொடர்பு வேண்டுமென்றே துண்டிக்கப்பட்டது என்று மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்
அறிவித்தார்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத்தலைநகர் பீஜிங்கிற்கு 7 ஆம் தேதி நள்ளிரவு 5 இந்தியர்கள் உள்பட 239 பேருடன் புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், 8 ஆம் தேதி அதிகாலை 2.40 மணிக்கு மாயமானது. 9 நாட்களாகியும் அந்த விமானம் என்ன ஆனது, கடத்தப்பட்டதா, தெற்கு சீனக்கடலில் விழுந்ததா, நாசவேலைக்கு ஆளானதா என்பதில் ஒன்றைக்கூட உறுதி செய்ய முடியாத நிலை தொடருகிறது.
தினந்தோறும் புதுப்புது தகவல்கள் வந்தாலும், ஒன்றுக்கொன்று முரண்பட்டிருப்பதால் மலேசிய விமான நிறுவனமும் சரி, விமானத்தில் பயணித்த பயணிகள், ஊழியர்களின் குடும்பங்கள் தவிக்கின்றன.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget