
1) முறையாக அமைந்த சொற்றொடரை தேர்வு செய்க.
A. நோக்குவார் செம்பொன்னும் ஒக்கவே ஓடும்
B. ஓடும் ஒக்கவே செம்பொன்னும் நோக்குவார்
C. ஒக்கவே செம்பொன்னும் நோக்குவார் ஓடும்
D. ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்
Answer : D.
2) பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
A. கண்
B. இலை
C. காலை
D. பூ
Answer : C.
3) காப்பாய் - இச் சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
A. கா
B. காப்பு
C. காப்ப
D. காக்க
Answer : A.
4) பொருந்தாத சொல்லைக் கண்டறிக
A. தத்தை
B. மயில்
C. சுகம்
D. கிள்ளை
Answer : B.
5) எந்தை - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
A. வினைச்சொல்
B. மரூஉச்சொல்
C. பெயர்ச்சொல்
D. உரிச்சொல்
Answer : B.
6) திறன் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
A. ஈற்றுப்போலி
B. தொழிற்பெயர்
C. ஆகுபெயர்
D. வினையெச்சம்
Answer : A.
7) கயிலையெனும் வடமலைககுத் தெற்குமலை அம்மே கனகமகா மேருவென நிற்குமலை அம்மே - இயைபுத் தொடையை தேர்க.
A. கயிலையெனும் - கனகமகா
B. வடமலை - தெற்குமலை
C. அம்மே - அம்மே
D. நிற்குமலை - மேருவென
Answer : C.
8) தண்டமிழ் ஆசான் என்னும் புகழ்மொழிக்கு உரியவர்
A. இளங்கோவடிகள்
B. திருத்தக்கத் தேவர்
C. நாதகுத்தனார்
D. சீத்தலைச் சாத்தனார்
Answer : D.
9) இ - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
A. அண்மைச் சுட்டு
B. சேய்மைச் சுட்டு
C. சுட்டுத்திரிபு
D. வினா எழுத்து
Answer : A.
10) அசைவிலா - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
A. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
B. வினைமுற்று
C. அடுக்குத் தொடர்
D. பண்புத் தொகை
Answer : A.
கருத்துரையிடுக