ஆர்யா என் குடும்பத்தில் ஒருவர் நயன்தாரா

ஆர்யாவின் தம்பி சத்யா நடித்துள்ள படம் ''அமரகாவியம்''. சத்யாவுக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்துள்ளார். 'நான்' படத்தை இயக்கிய ஜீவா
சங்கர் இயக்கியுள்ளார். தனது தம்பியின் படத்தை ஆர்யாவே தயாரித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை, சத்யம் தியேட்டரில் இன்று(ஜூன் 28ம் தேதி) நடந்தது. விழாவில் நயன்தரா, த்ரிஷா, பூஜா, லேகா வாஷிங்டன், ரூபா மஞ்சரி, இயக்குநர்கள் பாலா, விஷ்ணுவர்தன், சுசீந்திரன், ராஜேஷ், கண்ணன், லிங்குசாமி, ஜனநாதன், பார்த்திபன், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், விஷ்ணு விஷால், விக்ராந்த், சாந்தனு என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே கலந்து கொண்டது. இவ்வளவு பேர் வந்திருந்தாலும் விழாவில் பெருவாரியானவர்களின் பேச்சு நயன்தாராவை பற்றி தான். பொதுவாக தன் பட விழாக்களுக்கே வராத நயன்தாரா, இந்த விழாவில் எவ்வாறு பங்கேற்றார் என்பது தான். அதுமட்டும் இல்லாமல் அமரகாவியம் படத்தின் ஆடியோவை வெளியிட்டதும் அவர் தான்.

என் குடும்பத்தில் ஒருவர் - நயன்தாரா

விழாவில் பங்கேற்ற நயன்தாரா பேசியதாவது, பொதுவாக நான் எந்த படங்களின் ஆடியோ விழாவுக்கும் போகமாட்டேன். ஆனால் ஜாமி(ஆர்யா) எனது குடும்பத்தில் ஒருவர் என்பதால் பங்கேற்றேன். பொதுவாக எல்லா ஹீரோயின்களையும் ஆர்யாவுக்கு ரொம்ப பிடிக்கும், யாரையும் பிரிச்சு பார்க்கமாட்டார். இந்த விழாவில் நான் பங்கேற்றதே ஆர்யாவுக்காகத்தான். இந்த விழாவில் நானும் பங்கேற்றது சந்தோஷம். அமரகாவியம் படத்தில் பாடல்கள் எல்லாம் நன்றாக வந்துள்ளது, படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

த்ரிஷா பேசுகையில், இந்த விழாவுக்கு ஆர்யா என்னை கூப்பிடும்போது நயன்தாரா வருவதாக சொன்னார். நான் நிஜமாகவே நயன்தாரா வருகிறாரா என்றேன், கண்டிப்பாக வருவார் என்றார். ஆர்யாவின் நட்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். படத்தின் பாடல்களை பார்க்கும்போது நல்ல கதையுள்ள படமாக தெரிகிறது. அமரகாவியம் டீமுக்கு வாழ்த்துக்கள் என்றார்.

ஆர்யா சிறந்த வியாபாரி - இயக்குநர் பாலா

இயக்குநர் பாலா பேசுகையில், நான் தான் சத்யாவை அறிமுகப்படுத்தணும் என்று ஆசைப்பட்டேன், ஆனால் ஆர்யா அறிமுகப்படுத்திவிட்டான். ஆர்யா சிறந்த நடிகன் என்பதை விட சிறந்த வியாபாரி என்று சொல்லலாம். எல்லா ஊரிலும் எத்தனை தியேட்டர்களில் எத்தனை சீட் உள்ளது என்று கணக்கு பண்ணி சொல்லிவிடுவான். என்னிடம் சொல்லாமலே இந்தப்படத்தை எடுத்து முடித்துவிட்டான். இந்த டீமுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்றார்.

நடிகைகளை பிக்கப் பண்ணி டிராப் பண்ணுவதில் ஆர்யா பாஸ்ட் - பார்த்திபன்

பார்த்திபன் பேசும்போது, த்ரிஷா, நயன்தாரா என்று இத்தனை ஹீரோயின்கள் இந்தப்பட விழாவில் பங்கேற்றுள்ளனர். சத்யா ரொம்ப அதிர்ஷ்டக்காரர். அதேசமயம் அவருக்கு இனி ஹீரோயின்கள் கிடைப்பது கஷ்டம் தான். ஏனென்றால் தனது அண்ணன் ஆர்யாவுடன் நடித்த ஹீரோயின்கள் எல்லாம் கிட்டத்தட்ட அவருக்கு அண்ணி மாதிரி ஆயிட்டாங்க. ஆர்யாவை பொறுத்தவரை நடிகர் என்பதை விட இயக்குநரை பெரிதும் மதிக்கக்கூடியவர். பாஸ்ட் டிராக் வண்டி தான் பயணிகளை வேகமாக பிக்கப் பண்ணி டிராப் பண்ணும், ஆனால் ஆர்யாவோ, நடிகைகளை பிக்கப் பண்ணி டிராப் பண்ணுவதில் பாஸ்ட் டிராக்கை விட வேகமானவர் என்று சொன்னபோது விழா அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது. அதேசமயம் ஆர்யாவின் முக்கத்தில் சிறிது வெட்கமும் தென்பட்டது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget