தேனிலவை கொண்டாடிய அமலாபால்

நடிகை அமலாபாலும் டைரக்டர் விஜய்யும் மாலத்தீவில் தேனிலவு கொண்டாடினர்.


அமலாபாலுக்கும் டைரக்டர் விஜய்க்கும் கடந்த 12–ந்தேதி சென்னையில் திருமணம் நடந்தது. இது காதல் திருமணம் ஆகும். விஜய் இயக்கிய ‘தெய்வ திருமகள், தலைவா படங்களில் அமலாபால் நடித்துள்ளார்.

இருவரும் தேனிலவு கொண்டாட மாலத்தீவு சென்றனர். அங்கு நட்சத்திர ஓட்டலில், தங்கினார்கள். நிறைய இடங்களை சுற்றியும் பார்த்தனர். அங்கு தேனிலவு கேக்கும் வெட்டினார்கள். தேனிலவு கேக் படத்தை இன்டர்நெட்டிலும் அமலாபால் வெளியிட்டார். இதை பார்த்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு பேஸ்புக், டுவிட்டர்களில் வாழ்த்து தெரிவித்தனர்.

ஆனால் சில ரசிகர்கள் எதிரான கருத்துக்களை பதிவு செய்தனர். இதைபார்த்த அமலாபால் அதிர்ச்சியானார். உடனடியாக அந்த படங்களை இன்டர்நெட்டில் இருந்து நீக்கிவிட்டார். அமலாபால் இனிமேல் நடிப்பதில்லை என்று முடிவு எடுத்துள்ளார். முழுமையாக குடும்பத்தலைவியாகிறார்.

டைரக்டர் விஜய் புதுமுகங்களை வைத்து சைவம் படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. விரைவில் ரிலீஸ் செய்ய உள்ளனர்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget