தோழிகளான நாயகிகள்

ஆர்யாவின் வருகைக்குப் பிறகு இளம் ஹீரோக்கள் மத்தியில் ஆரோக்கியமான நல்ல நட்பு உருவாகி உள்ளது. அதுபோலவே இளம் நடிகைகளின்
மத்தியிலும் போட்டி பொறாமைகள் இல்லாத ப்ரண்ட்ஷிப் ஏற்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில் விதிவிலக்காக ஒரு சிலர் தவிர பெரும்பாலான நடிகைகள் மத்தியில் போட்டியும் பொறாமையும் தலைவிரித்தாடின.

ஒருவரைப் பற்றி மற்றொருவர் அவதூறான தகவல்களை பரப்பிவிடுவதும், கிசுகிசுக்களை பரப்பிவிடுவதும் நடந்தது. அதுமட்டுமல்ல, ஒரு நடிகைக்கு கிடைத்த பட வாய்ப்பை குறுக்குவழியில் தட்டிப்பறிப்பது, போட்டியாளரான நடிகை வாங்கிய சம்பளத்தைவிட குறைவான சம்பளத்துக்கு நடிக்க தயார் என்று ஆஃபர் கொடுத்து மற்றவர்களின் வாய்ப்புகளை தட்டிப்பறிப்பது போன்ற சம்பவங்கள் எல்லாம் சர்வசாதாரணமாக நடைபெற்றன.

இன்றைய இளம் கதாநாயகிகளிடம் இந்த மனோபாவம் இல்லை. உயிருக்குயிராக பழகுவதோடு, ஒருவருக்கொருவர் தொழில் ரீதியிலும் உதவிகளை செய்து கொள்கின்றனர். குறிப்பாக, அட்டகத்தி நந்திதா, நடுவுல கொங்சம் பக்கத்தைக் காணோம் காயத்ரி, ரம்மி ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் குளோஸ் ப்ரண்ட்ஷாக உள்ளனர்.

நல்லவிஷயம்..கீப் இட் அப்!
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget