கோலிவுட் புது வரவி செளஜன்யா

வேடப்பன், ஒரு சந்திப்பில், சோக்குசுந்தரம் ஆகிய படங்களை இயக்கியவர் ஆனைவாரி ஸ்ரீதர். இவர்தான் வேடப்பன் படத்தில் அருந்ததியை
அறிமுகம் செய்தார். அதன்பிறகுதான் வெளுத்துக்கட்டு படத்தில் நடித்து பிரபலமானவார் அருந்ததி. அவரைத் தொடர்ந்து இப்போது சோக்குசுந்தரம் படத்தில் செளஜன்யா என்ற கன்னட நடிகையை தமிழுக்கு அறிமுகம் செய்திருக்கிறார் ஆனைவாரி ஸ்ரீதர்.

இந்த படத்தில் ஒரு டீச்சர் கேரக்டரில் அவர் நடித்துள்ளாராம். கன்னடத்தில் 6 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள செளஜன்யா, இந்த படத்தில் புதுமுக நடிகர் ராமசாமியுடன் நடித்தது பற்றி கூறுகையில், எல்லா நடிகைகளுமே ஒரு மொழியில் என்ட்ரி ஆகும்போது பெரிய ஹீரோ அல்லது பெரிய டைரக்டரின் படத்தில்தான் நடிக்க ஆசைப்படுவார்கள். ஆனால், நான் அப்படி பார்ப்பதில்லை. எனக்கு கதை பிடித்திருந்தால் எந்த நடிகருடன் என்றாலும் நடிப்பேன். கன்னடத்திலும் அப்படித்தான் படங்களை தேர்வு செய்து நடித்துள்ளேன் என்கிறார். 

மேலும், இந்த படத்தில் ஹோம்லியான வேடத்தில்தான் நடித்திருக்கிறேன். ஆனால், அடுத்தடுத்து கிளாமரான வேடங்கள் கிடைத்தால் படுகவர்ச்சியாகவும் நடிப்பேன். நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதை கதைகளும், டைரக்டர்களும்தான் முடிவு செய்யவேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் நான் இப்படித்தான் நடிப்பேன் என்று யாரிடமும் கண்டிசன் போடமாட்டேன் என்று சொல்லும் செளஜன்யா, சோக்குசுந்தரம் பட விழாவில் என்னைப்பார்த்து டைரக்டர் பேரரசு, நான் நக்மா சாயலில் இருப்பதாக சொன்னார். அது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது.
காரணம், நக்மா பெரிய நடிகை. அவருடன் என்னை ஒப்பிடுவது பெரிய சந்தோசத்தை தந்தது. அதனால், தமிழ் சினிமாவில் அவர் விட்டுச்சென்ற இடத்தை பிடிக்க நான் முயற்சி எடுப்பேன் என்கிறார் செளஜன்யா
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget